பாகிஸ்தான் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் அந்நாட்டு மக்கள் அடிப்படை சேவைகள் கூட முழுமையாகப் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவிக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளிடம் புதிய நிதியுதவிக்காக முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் மீண்டும் ஐபிஎம்-யிடம் நிதியுதவி பெற முடிவு செய்து 7 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் திட்டத்திற்காக IMF உடனான ஒப்பந்தத்தைச் செய்யப் பாகிஸ்தான் அரசு முக்கியமான ஒரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஐபிஎம்-யிடம் கடன் பெற வேண்டும் என்றால் வருவாய் மற்றும் நிதி நிலையை மேம்படுத்த நம்பிக்கை அளிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக 7 பில்லியன் டாலர் கடன் பெற பாகிஸ்தான் அரசு 170 பில்லியன் ரூபாய் அளவிலான வரிகளை விதிக்க உள்ளது. இந்த அறிவிப்புப் பாகிஸ்தான் மக்கள் பெரிய அளவில் பாதித்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் 170 பில்லியன் ரூபாய் அளவிலான வரிகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான் அரசு.
நிதியமைச்சர் இஷாக் தார்
பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தார், 7 பில்லியன் டாலர் அளவிலான கடன் திட்டத்தை முடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து IMF அமைப்பிடம் இருந்து ஒரு ஒப்பந்த அறிக்கை பெற்றுள்ளதாகக் கூறினார்.
பாகிஸ்தான் பொருளாதாரம்
இந்த நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான நிதியுதவியைப் பெற இரு தரப்பும் ஊழியர் அளவிலான ஒப்பந்தத்தை இன்னும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
அந்நியச் செலாவணி
பாகிஸ்தான் நாட்டின் அந்நியச் செலாவணி 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்துள்ளது, பொருளாதாரச் சரிவில் இருந்து அதைத் தடுக்கவே தற்போது ஐஎம்எப் குழு பரிந்துரைப் படி 170 பில்லியன் டாலர் மதிப்பிலான வரியை விதிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் துவங்க உள்ளது பாகிஸ்தான் அரசு.
17 நாள் இறக்குமதி
பிப்ரவரி 3 ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி 2.916 பில்லியன் டாலராகக் குறைந்ததுள்ளது. இந்தத் தொகை 16 அல்லது 17 நாளுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஐஎம்எப் கடன் திட்டம்
இந்த நிலையில் அடுத்தச் சில நாட்களில் ஐஎம்எப் கடன் திட்டத்தை ஒப்புதல் அளித்தால் தான் நிதியுதவி கிடைக்கும். பாகிஸ்தானுக்கு 2019ல் 6 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அறிவித்தது, தற்போது இத்திட்டத்தை 7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ஐஎம்எப் அதிகாரிகள்
ஐஎம்எப் அதிகாரிகள் சுமார் 10 நாள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வியாழன் இரவு பாகிஸ்தானை விட்டு அமெரிக்கச் சென்ற நிலையில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்தும் விர்ச்சுவல் முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி
நேதன் போர்ட்டர் தலைமையிலான IMF அதிகாரிகள் குழு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வந்து அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்தது. IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) கீழ் விவாதங்களை நடத்துகிறது.
More From GoodReturns

Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications