பாகிஸ்தான் அரசு ஆப்பிள் நிறுவனத்தை தங்கள் நாட்டில் ஐபோன் உற்பத்தி தொடங்க அழைத்துள்ளது. இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் துறை தற்போது மிகப்பெரிய உற்பத்தி வர்த்தகமாக மாறியது மட்டும் அல்லாமல் பெரும் வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக மாறியுள்ளது. இதை உணர்ந்த பாகிஸ்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு சில சலுகைகளை வழங்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தை பொருத்த வரையில் எந்த நாட்டிலும் உடனடியாக முழு உற்பத்தி தொடங்காது, முதலில் பழைய ஐபோன்களை பழுதுபார்த்து ஏற்றுமதி செய்வதில் இருந்து தொடங்கும். இதே உத்தியை பாகிஸ்தான் நாட்டிலும் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் பழுதுபார்ப்பில் இருந்து உற்பத்திக்கு மாறியது.

பாகிஸ்தான் வழங்கும் சலுகைகள்
ஆப்பிளுக்கு தொழிற்சாலை அமைக்க மலிவான நிலம் வழங்குவதாகவும், உற்பத்தி அல்லது ஏற்றுமதியைப் பொறுத்து 8% செயல்திறன் அடிப்படையிலான சலுகை (performance incentive) கொடுக்கப்பதாகவும், 2-3 ஆண்டுகள் பழமையான ஐபோன்களை பாகிஸ்தானில் பழுதுபார்த்து ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பழைய ஐபோன்களின் ஏற்றுமதி வர்த்தகம் முதல் ஆண்டில் 100 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டும் என்று பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கிறது. பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் ஐபோன் சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் 6%லிருந்து 8%க்கு உயர்த்தப்படும் எனவும் அடுக்கடுக்கான அறிவிப்புகளை அறிவித்துள்ளது.
சீனா உதவி
இந்த திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் சீன நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது. இதன் வாயிலாக சீன நிறுவனங்களிடமிருந்து 557 மில்லியன் டாலர் அளவிலான முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது பாகிஸ்தான்.
ஆப்பிளின் திட்டம்
ஆப்பிள் உடனடியாக ஐபோன் உற்பத்தி தொடங்காது. முதலில் பழைய ஐபோன்களை பழுதுபார்த்து (refurbish) ஏற்றுமதி செய்வது, ஊழியர்களை பயிற்றுவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும். இது இந்தியா, இந்தோனேசியா, மலேசியாவில் ஆப்பிள் பின்பற்றிய உத்தி. அங்கு பழுதுபார்ப்பில் இருந்து படிப்படியாக உற்பத்திக்கு மாறியது. பாகிஸ்தானும் இதே போக்கை எதிர்பார்க்கிறது.
பாகிஸ்தானின் கனவு
பாகிஸ்தான் தன்னை மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்க, இறக்குமதியை குறைக்க இந்த முயற்சி பெரிய அளவில் பலன் தரும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications