பாகிஸ்தான் நாட்டில் ஸ்மார்ட் லாக்டவுன்.. தீயாய் பரவும் தகவல்..!

மத்திய கிழக்கு நாடுகளில் உருவான போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வேளையில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதன்மையான நாடாக உருவெடுத்துள்ளது.

ஏற்கனவே பெரும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்த எரிபொருள் விலை உயர்வு மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை கொடுத்துள்ளது. இதனாலேயே ஈரான் போர் முடிவுக்கு கொண்டு வர என்னவெல்லாம் செய்ய முடியுமோ பாகிஸ்தான் செய்து வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் ஸ்மார்ட் லாக்டவுன்.. தீயாய் பரவும் தகவல்..!

பாகிஸ்தான் தனது எரிபொருள் தேவைகளின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எல்என்ஜி போன்றவற்றில் வெளிநாட்டு சார்பு அதிகமாக இருப்பதால், ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட விநியோக சிக்கல்கள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதித்துள்ளன. உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்ததுடன், இறக்குமதி செலவுகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.

இந்த சூழ்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு நாணயச் செலவினத்தை குறைக்கவும் பாகிஸ்தான் அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. நிதி சுமையை குறைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாட்டுகளை கொண்டு வந்துள்ள நிலையில் புதிதாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வர ஆய்வுகளை தொடங்கியுள்ளது.

ஸ்மார்ட் லாக்டவுன்
இந்த நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் அரசு ஸ்மார்ட் லாக்டவுன் என்ற கட்டுப்பாட்டு முறையை பரிசீலித்து வருவதாத தகவல் வெளியாகியுள்ளது. இது கொரோனா காலத்தில் நடைமுறைக்கு வந்த முழுமையான லாக்டவுன் போல அல்லமல் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் செயல்பாடுகளை மட்டுமே கட்டுப்படுத்தும் அணுகுமுறை என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட் லாக்டவுன் முறையின் மூலம், நாட்டின் முழுமையான பொருளாதார செயல்பாடுகளை முடக்காமல், எரிபொருள் சேமிப்பை மேம்படுத்தும் நோக்கமாக உள்ளது. இதனால், தொழில்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தை உறுதி செய்யும் முன், பாகிஸ்தான் அரசின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கவர்னர் அசிஃப் அலி சர்தாரி தலைமையிலான நிர்வாகம், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், ராணுவத் தலைமை மற்றும் மாகாண முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அரசு ஏற்கனவே பல்வேறு எரிபொருள் சேமிபு்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு அலுவலகங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை (Work From Home), பள்ளிகள் தற்காலிகமாக மூடல், அரசு நிகழ்ச்சிகள் குறைப்பு போன்றவை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+