பாகிஸ்தான் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்றால் அமெரிக்கா டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 200-ஐ தாண்டியது.
எரிபொருள் இல்லாமல் பல மின்சார உற்பத்தி நிலையைத்தை மூடப்பட்டு இருந்தது, வருமானம் இல்லாத அரசு மின்சாரக் கட்டணத்தையும், பெட்ரோல் டீசல் விலையைத் தாறுமாறாக அதிகரித்தது. கிட்டதட்ட ஐஎம்எப், உலக வங்கி, வெளிநாடுகளின் கடன் இல்லை என்றால் ஒரு வருடம் கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில் தான் உள்ளது.
இந்த நிலை வரி வருமானத்தை அதிகரிக்கப் பாகிஸ்தான் அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
மிஃப்தா இஸ்மாயில்
நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) நிதியுதவியைப் பெற வேண்டும் என்பதற்காகப் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பணக்காரர்கள் மீதான வரிகளை உயர்த்தி, புதிய கார்கள் வாங்குவதைத் தடை செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
10 பில்லியன் டாலர்
220 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தான் 10 பில்லியன் டாலர்களுக்கு குறைவான அன்னிய செலாவணி கையிருப்பை வைத்துள்ளது. இந்த தொகை 45 நாட்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட போதாது என்பது தான் பாகிஸ்தானின் நிலை.
சிக்கல்
இதோடு பாகிஸ்தான் நாட்டின் நடப்புக் கணக்கு விரிவடைந்து வருவதாலும், நிதிப் பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதாலும் வாங்கிய கடனுக்கும், செலுத்த வேண்டிய பேமெண்ட்-களை அளிக்க முடியாத நிலையில் சிக்கிக்கொண்டு உள்ளது.
வரி, வாகனம்
ஜூலையில் தொடங்கும் 2022/23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்ட இஸ்மாயில், பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்துவது, கார்கள் இறக்குமதி மற்றும் அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவதைத் தடை செய்வது என்று கூறினார்.
சீனாவின் நிதியுதவி
பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறையால் தவித்து வருவதற்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் சுமார் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியைக் கடனான வழங்கச் சீன வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன.
சீனா மீது வரி
சீனா பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடன் கொடுத்துள்ள நிலையில் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் இப்போது கொடுத்துள்ள கடன் பெரிய அளவில் உதவும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் மீது 10 சதவீத ஒழுங்குமுறை வரியைப் பாகிஸ்தான் விதித்துள்ளது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications