இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்திருக்கிறது. பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்து 820 பில்லியன் ரூபாய் வரையிலான மதிப்பை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
மே 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண் KSE 100 Index சுமார் 16 சதவீதம் வ சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. மே 9ஆம் தேதி கராச்சி பங்குச்சந்தையில் வழக்கம் போல வர்த்தகம் தொடங்கியது. ஆனால் சில நிமிடங்களிலேயே சரிவடைய தொடங்கி 1106 புள்ளிகள் வரை சரிவடைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய கராச்சி பங்கு சந்தை மதிப்பு தற்போது வரை 16 சதவீதம் சரிந்து இருக்கிறது.

மே 8ஆம் தேதி மட்டும் 7.6% வரை சரிவடைந்து முதலீட்டாளர்கள் 820 மில்லியன் ரூபாயை இழந்தனர். ஒரே நாளில் இவ்வளவு சரிவு ஏற்பட்டதால் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் சிறிது நேரம் வர்த்தகமே நிறுத்தி வைக்கப்பட்டது. மே 9ஆம் தேதி கராச்சி பங்குச்சந்தை 1,05,133 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏராளமான முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் இருந்த பங்குகளை விற்பனை செய்தனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றமும் நேற்றைய தினம் இரவு இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த நிகழ்ந்த பதிலடி தாக்குதல்களுமே இதற்கு காரணம். மே 9ஆம் தேதி KSE 100 இண்டெக்ஸ் இன்ட்ராடேவில் 1,02,420 என சரிவை கண்டது. இதனை அடுத்து இந்த செய்தியை எழுதும் சமயத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண் 1,03,066 புள்ளிகள் என உயர்ந்து வர்த்தகமானது.
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண் 1,20, 796 என வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஆனால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சரிவடைய தொடங்கிய பங்குச்சந்தை பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஆகிய தாக்குதலை தொடர்ந்து படிப்படியாக சரிவடைந்து தற்போது வரை 16 சதவீதம் வரை சரிவு கண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலில் இந்தியாவின் கை ஓங்கி இருப்பதன் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சம் காரணமாக வந்தவரை லாபம் என பாகிஸ்தான் பங்குச்சந்தையில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதனை அடுத்து ராஜாங்க ரீதியான பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்த பயஙகர்வாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. மே 9ஆம் தேதி மீண்டும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications