மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக சீனா பல துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த வளர்ச்சி தற்போது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பது தான் பெரும் சோகமான விஷயம்.
பாகிஸ்தான் தற்போது பெரும் நிதி நெருக்கடியிலும், மோசமான பொருளாதாரத்திலும் உள்ளது அனைவருக்கும் தெரியும். அந்நாட்டின் பொருளாதாரத்தை திவால் ஆகாமல் தாங்கிப்பிடிக்க உலக வாங்கியின் உதவியை நாடி வருகிறது.

இப்படியிருக்கையில் சீனா தனது கடன் வலை திட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது. சீனா பொருளாதாரத்தில் தடுமாறும் நாடுகளுக்கு காஸ்ட்லியான உள்கட்டமைப்பு திட்டத்தை குறைந்த விலையில் அளித்து, அதை கால தாமதம் செய்து பின்னாளில் அடுத்தடுத்து திட்டங்களை கைப்பற்றுவது வழக்கமாக கொண்டு உள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பல வகையில் உதவிகளை செய்து வரும் சீனா தற்போது அந்நாட்டு ராணுவத்திற்கும் உதவி செய்ய முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான், சீனாவுடன் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு மெகா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி சீனா, பாகிஸ்தானுக்கு 2028க்குள் 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கி கப்பல்களை அளிக்க வேண்டும். இதில் முதல் நான்கு டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கி படகுகள் சீனாவில் முழுமையாக உருவாக்கப்படும். மீதமுள்ள நான்கு படகுகள் பாகிஸ்தானில் அசம்பிள் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கடற்படையில் முதல் சீன நீர்மூழ்கி கப்பல் 2026ல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் இதை இந்தியாவுக்கு சீனா கொடுக்கும் நெருக்கடியாக விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே சீனா பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை கொடுத்துள்ள நிலையில் தற்போது போர் கப்பல்களை அளிக்க உள்ளது.
பாகிஸ்தான் கடற்படை தளபதி நவீத் அஷ்ரஃப், சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் 2028ஆம் ஆண்டுக்குள் 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கி கப்பல்களை பெறும் ஒப்பந்தம் சுமூகமாக நடக்கிறது என்று கூறினார். இந்த படகுகள், வட அரபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தானின் கண்காணிப்பு திறனை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications