இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடந்த மத்திய அமைச்சரவை பொருளாதார விவகாரக் குழு (CCEA) கூட்டத்தில், வருமான வரித்துறைக்கு ஒரு முக்கியமான தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ரூ.1,435 கோடி செலவில், பான் 2.0 திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம், ஒவ்வொரு பான் கார்டுக்கும் QR கோடு சேர்த்து, தற்போதுள்ள பான் அமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் மேம்பாடு பல்வேறு அரசு சேவைகளை எளிதாக்கி, வரி செலுத்துவோரின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள பான் கார்டுதாரர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் QR கோடு சேர்த்து இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRI) பயனடைவார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) வரி செலுத்துதல் மற்றும் நிதி நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில், பான் 2.0 திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
NRIகளுக்கு இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வது, சொத்து வாங்குவது மற்றும் முதலீடு செய்வது போன்ற பல்வேறு நிதி மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளுக்கு பான் கார்டு அவசியமாகும். இந்த நிலையில் NRIகள் எப்படி பான் கார்டு பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.
NRIகள் படிவம் எண் 49A-ஐ சமர்ப்பித்து, தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன் UTIITSL அல்லது Protean ( என்எஸ்டிஎல் இ-கவ்) ஆகியவற்றின் பான் விண்ணப்ப மையத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது ஐயூஐடிஎஸ்எல் அல்லது புரோட்டியன் (முன்னாள் என்எஸ்டிஎல் இ-கவ்) இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிச் செல்லும் நிலையில், பான் 2.0 திட்டம் சரியான முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்த திட்டம் NRIகள் இந்திய வரி அமைப்புடன் இணைவதையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் எளிதாக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications