இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடந்த மத்திய அமைச்சரவை பொருளாதார விவகாரக் குழு (CCEA) கூட்டத்தில், வருமான வரித்துறைக்கு ஒரு முக்கியமான தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ரூ.1,435 கோடி செலவில், பான் 2.0 திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம், ஒவ்வொரு பான் கார்டுக்கும் QR கோடு சேர்த்து, தற்போதுள்ள பான் அமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் மேம்பாடு பல்வேறு அரசு சேவைகளை எளிதாக்கி, வரி செலுத்துவோரின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள பான் கார்டுதாரர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் QR கோடு சேர்த்து இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRI) பயனடைவார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) வரி செலுத்துதல் மற்றும் நிதி நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில், பான் 2.0 திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
NRIகளுக்கு இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வது, சொத்து வாங்குவது மற்றும் முதலீடு செய்வது போன்ற பல்வேறு நிதி மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளுக்கு பான் கார்டு அவசியமாகும். இந்த நிலையில் NRIகள் எப்படி பான் கார்டு பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.
NRIகள் படிவம் எண் 49A-ஐ சமர்ப்பித்து, தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன் UTIITSL அல்லது Protean ( என்எஸ்டிஎல் இ-கவ்) ஆகியவற்றின் பான் விண்ணப்ப மையத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது ஐயூஐடிஎஸ்எல் அல்லது புரோட்டியன் (முன்னாள் என்எஸ்டிஎல் இ-கவ்) இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தியா டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிச் செல்லும் நிலையில், பான் 2.0 திட்டம் சரியான முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தி பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்த திட்டம் NRIகள் இந்திய வரி அமைப்புடன் இணைவதையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் எளிதாக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications