பரந்தூர் ஏர்போர்ட்: வீடுகளை இழப்போருக்கு என்ன நிவாரணம்? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பரந்தூர், காஞ்சிபுரம்: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதில் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது . நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகளை அரசு தொடங்கி இருக்கிறது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்கள் அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளை இழப்போருக்கு நிவாரணம்: நில உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல பரந்தூர் விமான நிலையம் அமைப்பதால் அந்த பகுதியில் தங்களுடைய வீடு மற்றும் உடமைகளை இழக்கும் மக்களுக்கும் அரசு தரப்பில் என்ன நிவாரணம் வழங்கப்படும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகிருக்கின்றன . விவசாய நிலங்கள் இல்லாமல் பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிக்காக வீடுகள், கடைகள், காலநடை பண்ணைகள் உள்ளிட்டவையும் பரந்தூரில் கையகப்படுத்தப்பட உள்ளன.

பரந்தூர் ஏர்போர்ட்: வீடுகளை இழப்போருக்கு என்ன நிவாரணம்? -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வேறு இடத்தில் வீட்டு மனை: வீட்டின் கட்டமைப்பு மதிப்பில் 100 சதவீத இழப்பீடு தொகையாகவும் கூடுதலாக 25 சதவீதம் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ள அரசு இதற்கு மாற்றாக வேறு இடத்தில் வீட்டு மனை வழங்கப்படும் என கூறியுள்ளது.அந்த வகையில் 5 செண்ட் வரையிலான இடத்தை வழங்கும் மக்களுக்கு வேறு இடத்தில் 5 செண்ட் நிலம் வழங்கப்பட உள்ளது. 5 முதல் 7 செண்ட் வரையிலான இடத்தை வழங்குவோருக்கு 7 செண்ட் நிலமும், 7 செண்டுக்கு மேல் இடங்களை வழங்குவோருக்கு 10 செண்ட் அளவிலும் அரசு சார்பாக நிலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில இந்து நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை: பரந்தூரில் இருந்து இடம் மாற்றம் செய்யப்படும் குடும்பங்களுக்காக அரசு வேறு இடத்தில் 400 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்துள்ளது. இந்த வீடு வேண்டாம் எனக் கூறுபவர்கள் அதற்கு பதிலாக 8 லட்சம் ரூபாயை பணமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் பரந்தூர் விமான நிலைய பணிக்காக தங்களுடைய வீடு மற்றும் உடமைகளை வழங்கக்கூடிய குடும்பங்களை சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் அல்லது 7.5 லட்சம் பணமாக கொடுக்கப்படும் அல்லது அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு மாதத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கு ரூ.1லட்சம்: பரந்தூர் விமான நிலைய பணிக்காக வீடுகள், கடைகளை வழங்குவோருக்கும் மொத்தமாக தலா 70 ஆயிரம் ரூபாய் பணம் ஒரு முறை செட்டில்மெண்டாக வழங்கப்படும். தங்களுடைய கால்நடை பண்ணைகளை இழக்கும் நபர்களுக்கு ஒரு முறை நிதி உதவியாக 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு தெரிவித்து இருக்கிறது. பண்ணைகள் மற்றும் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்தவர்கள் வேறு இடங்களில் அவற்றை இடமாற்றம் செய்வதற்கு அல்லது புதிதாக கட்டுவதற்கு என 1 லட்சம் ரூபாய் ஒருமுறை நிதி உதவியாக வழங்கப்படும்.

30% மானியத்துடன் கடன் உதவி: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் இந்த பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கக்கூடிய குடும்பங்களில் ஒருவருக்கு சுயதொழில் செய்வதற்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும், இதில் 30 சதவீத தொகை மானியமாகவும் வட்டி தொகையில் 3 சதவீதம் மானியத்தையும் அரசு செலுத்தி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய பணிக்காக வீடுகளை வழங்குவோரின் குடும்பங்களில் ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு சரக்கு போக்குவரத்து ,வாகன உற்பத்தி, அழகு கலை, கட்டுமானம் ,ஐடி சேவை, சுற்றுலா உள்ளிட்ட தொழில்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அரசு வழங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+