சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பது தொடர்பான திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கி இருக்கிறது. இதனை அடுத்து புதிய விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கூடிய விரைவில் தமிழ்நாடு அரசு கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒருபுறம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான திட்ட அனுமதிக்காக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலித்த விமான போக்குவரத்து துறை அமைச்சகம் திட்ட அனுமதிக்கு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கி இருக்கிறது. விமான நிலைய திட்டத்திற்கு இடத்திற்கான அனுமதி ஏற்க்கனவே கிடைத்த நிலையில் தற்போது திட்டத்திற்கான ஒப்புதலும் கிடைத்திருப்பதால் அரசு விரைவில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோர இருக்கிறது.
பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளுக்கு இரண்டு கட்டங்களாக ஒப்புதல் கிடைக்க வேண்டும். ஒன்று இடத்திற்கான ஒப்புதல் மற்றொன்று திட்டத்திற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதல். விமான நிலைய இடத்திற்கான ஒப்புதல் 2024 ஆகஸ்ட் மாதமே கிடைத்தது. தற்போது கொள்கை ரீதியிலான திட்ட ஒப்புதல் கிடைத்திருக்கிறது. பரந்தூர் விமான நிலையம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் அமைய இருக்கிறது.
27,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் கட்ட திட்ட பணிக்காக 1145 கோடி தேவைப்படுவதாக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ தெரிவித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் இருந்தே முதல் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளில் அந்த பணிகள் முடிவடையும் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டு இணையான ஓடுபாதைகளுடன் இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் கட்ட டெர்மினல் 3,51,380 சதுர மீட்டர்கள் பரப்பளவில் கட்டப்பட இருக்கிறது. ஒப்பந்த புள்ளி கோருவதற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications