சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பயணிகள் வருகையும் சரக்கு வருகையும் அதிகரிக்கும் என்பதால் அதற்குள்ளாக சென்னைக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் அமைய வேண்டும் என அரசு முடிவு செய்தது. இதற்காக பல்வேறு இடங்களை ஆய்வு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது பொருத்தமானதாக இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த பகுதியில் விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டன, இது மத்திய அரசுக்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது . தற்போது விமான நிலையத்தை கட்டுவதற்கான பணிகளை அரசு தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்ற வருகின்றன . விமான நிலையம் கட்டுவதற்கு சில கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இருந்தாலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக அந்த பணிகளை முன்னெடுத்து இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு தாலுகாக்களிலும் 5,320 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்கான நிலம் என்பது தேவைப்படுகிறது. இதில் 3774 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்தும் தனியாரிடமிருந்தும் கைப்பற்ற வேண்டும் . இதற்கான பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன . பரந்தூர் , வளத்தூர், மடப்புரம் என 20 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதில் 13 கிராமங்களில் விமான நிலையமும் பிற கிராமங்களில் விமான நிலையத்திற்கு தேவையான சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட இருக்கின்றன. தற்போது வருவாய்த்துறையினர் 21 அலகுகளாக பிரித்து நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். 3694 பேருக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் 12 கிராமங்களை சேர்ந்த 444 பேர் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக தங்களுடைய நிலங்களை வழங்கி இருக்கிறார்கள்.
இதுவரை 540 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசினை பொறுத்தவரை இந்த நில உரிமையாளர்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிகமான தொகையை இழப்பீடாக வழங்கி வருகிறது. அதிகபட்சமாக பரந்தூர் பகுதியில் இருந்து பெரும்பாலான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி தெரிவிக்கிறது.
ஏகனாபுரத்தில் நிலம் எடுப்பு சவால் மிகுந்ததாக இருக்கும் ஏனெனில் அந்த கிராம மக்கள் தான் மிகக் கடுமையாக இந்த விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாவதால் விமான நிலையம் கட்டுமானமும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதும் தொடர்ந்து தாமதமான வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே இந்த திட்டம் ஓராண்டு காலம் தாமதம் அடைந்து விட்டது.
நிலம் கையகப்படுத்தும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து விட அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட உடன் அரசு கட்டுமான பணிக்கான டெண்டரை வெளியிடும். இதன் பின் கட்டுமான பணி தொடங்கும். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்குள்ளாகவே பணிகளை தொடங்க அரசு தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. அப்படி தொடங்கினால் 2028ஆம் ஆண்டு இறுதியில் முதல் கட்ட பணிகள் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications