சென்னை: தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (TIDCO), சென்னையின் புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 153 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை, பரந்தூர் புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலையம், சென்னையின் தற்போதைய விமான நிலையமான சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து செயல்படும். இந்த புதிய விமான நிலையம், சுமார் 45,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 2029 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமான நிலையம், வருடத்திற்கு 10 கோடிக்கும் அதிகமான விமான பயணிகளுக்குச் சேவை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது, சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விமான நிலையம், சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படும். இது, சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்கப்படுவதுள்ளதாக 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது, இப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த பிரச்சனைகளைத் தாண்டி, விமான பயணிகளுக்குப் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் என்றும் பலரும் கூறினர். ஆனால் இதேவேளையில் சென்னைக்கு 2வது விமான நிலையமும் அவசியமானதாக உள்ளது. அது ஏன் தெரியுமா..?
தமிழ்நாடு, குறிப்பாக சென்னை நகரம் தொழில்நுட்பம், உற்பத்தி, நிதி தொழில் என பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியுடன், சென்னை விமான நிலையம் தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்தைத் திறம்படக் கையாள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், சென்னையின் அருகில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2007-ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதன்முதலாக அறிவித்தார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர், பரந்தூர் இடம் இதற்கு மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.
தற்போதைய சென்னை விமான நிலையத்தின் சவால்கள்:
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை விமான நிலையம் தற்போது மாதம் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாள்கிறது.
பெரிய விமானங்களைக் கையாளும் திறன் இல்லை: பெரிய விமானங்களை நிறுத்தும் வசதிகள் இல்லாததால், பல சர்வதேச விமானச் சேவைகள் சென்னையைத் தவிர்த்துப் பிற நகரங்களைத் தேர்வு செய்கின்றன.
உள்நாட்டு விமானச் சேவையின் ஆதிக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானச் சேவையே அதிகம். சர்வதேச விமானச் சேவைகளை விரிவுபடுத்தும் தேவை உள்ளது.
More From GoodReturns

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications