இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்வதற்கு நாம் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்தாக வேண்டும். பொது டிக்கட் முன்பதிவு ரயில் பயணம் தொடங்குவதற்கு 60 நாட்களுக்கு முன்பு தொடங்கும், தட்கல் டிக்கெட் முன்பதிவு ரயில் பயணம் தொடங்குவதற்கு முந்தைய நாள் தொடங்குகிறது.
பெரும்பாலும் டிக்கெட் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்பனை ஆகிவிடும். ஏனெனில் ரயில்கள் குறைந்த கட்டணத்தில் எளிமையான சௌகரியமான பயணத்தை தருகின்றன என்பதால் ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போதுமே போட்டி நிறைந்ததாக இருக்கும். பொதுவாக நாம் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆர்ஏசி என்ற வசதி இருக்கும். இதனை reservation against cancellation என அழைக்கிறார்கள்.

அதாவது ஆர்ஏசி டிக்கெட் என்பது இரண்டு பேருக்கு ஒதுக்கப்படும். இரண்டு பயணிகளுக்கும் பகுதி அளவு இருக்கையை இந்த டிக்கெட் உறுதி செய்யும். ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் அதனை கேன்சல் செய்யும் போது காத்திருப்பில் உள்ள இருவருக்கு அந்த ஒரு இடம் ஆர்ஏசி டிக்கெட்டாக வழங்கப்படும். இரண்டு பயணிகள் ஒரே பெர்த்தில் பயணம் செய்வார்கள்.
ஒரே பெர்த்தில் இருவர் பயணம் செய்தாலும் இருவருமே முழுமையான தொகை தான் செலுத்துகிறார்கள். அதாவது ஒரு இருக்கைக்கு இரண்டு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தான் நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஒரே பெர்த்தில் இருவர் பயணிக்கும் போது ஏன் இரு பயணிகளும் முழு தொகையையும் செலுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இந்த சமயங்களில் ஆர்ஏசி டிக்கெட்டுகளுக்கு பாதி அளவு கட்டணம் வசூலிப்பது தான் நியாயம் என்றும் ரயில்வே துறைக்கு பொது கணக்கு குழு அறிவுறுத்தி இருக்கிறது.
ஆர்ஏசி டிக்கெட் இரண்டு பயணிகளுக்கு ஒதுக்கப்படுவதால் பகல் நேரத்தில் இருவரும் அமர்ந்து கொண்டு பயணிக்கலாம் இரவு நேரத்தில் இருவருமே தங்கள் கால்களை எதிரெதிரை நீட்டிக்கொண்டு உறங்கலாம். இருவரும் மியூச்சுவலாக இருக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே விதி.
ஆனால் ஒரு இருக்கையை இருவர் பகிரும் போது இரண்டு டிக்கெட் கட்டணம் வசூல் செய்வது நியாயமா என நாடாளுமன்ற பொது கணக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படுக்கை வசதிக்காக ஒரு பயணி கட்டணம் செலுத்த நிலையில் அவருக்கு அமர்வதற்கான ஆர்ஏசி இருக்கை மட்டுமே கிடைப்பதால் முழு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத என தெரிவித்திருக்கிறது.
ஆர்ஏசி டிக்கெட் பயணிகளுக்கு பாதி கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து மீதியை ரயில்வே துறை திருப்பித் தர வேண்டும் அதற்கான வழிமுறைகளை விரைவில் உருவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் நமக்கான ஆர்ஏசி டிக்கெட் கட்டணம் பாதியாக குறையும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications