இந்தியாவில் சுமார் 7 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations ) சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் டீலர்களிடம் விற்பனையாகாமல் லட்சக்கணக்கான பயணிகள் வாகனங்கள் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 73,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 7 லட்சம் வாகனங்கள் விற்பனையாகாமல் டீலர்களிடமே தேங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக இவ்வளவு வாகனங்கள் தேங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக டீலர்ஷிப் நிறுவனங்கள் வாகனங்களை வைத்திருக்கும் காலம் 65 முதல் 67 நாட்களாக இருந்த நிலையில் தற்போது அதனை 70 முதல் 75 நாட்களாக உயர்த்தியுள்ளன. இருந்தாலும் வாகன விற்பனை சரிவிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இலட்சக்கணக்கான வாகனங்கள் தங்கள் கைவசம் இருக்கும் நிலையில் புதிதாக அறிமுகமாகும் மாடல்களை வாங்கி வைத்து விற்பனை செய்வதும் சவாலாக இருக்கிறது என டீலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான மனிஷ் ராஜ் சிங்கானியா இது தொடர்பாக வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர்கள் தரப்பில் வாகன உற்பத்தியை குறைக்கும் படி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
டீலர்களிடம் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கியிருப்பதாக சொல்லப்பட்டாலும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 10% அதிகரித்துள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் மட்டும் 3,20,129 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் அதே காலகட்டத்தில் பயணிகள் வாகனங்கள் ஹோல்சேல் முறையில் விற்பனை செய்யப்படுவது 2.5% குறைந்துள்ளது.எனவே டீலர்களுக்கு உதவி செய்யும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியையும் ஹோல்சேல் விற்பனையையும் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டீலர்களிடம் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கிருப்பதாக சொல்லப்பட்டாலும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 10% அதிகரித்துள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் மட்டும் 3,20,129 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் அதே காலகட்டத்தில் பயணிகள் வாகனங்கள் ஹோல்சேல் முறையில் விற்பனை செய்யப்படுவது 2.5% குறைந்துள்ளது.எனவே டீலர்களுக்கு உதவி செய்யும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியையும் ஹோல்சேல் விற்பனையையும் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications