ஓரே இரவில் 350 பேர் கோடீஸ்வரர் ஆனார்கள் என்றால் வெளிநாட்டில் தான் இருக்கும் எனத் தப்புக் கணக்கு போட வேண்டாம், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் பல நிறுவனங்கள் உள்ளது. இந்தியாவில் இருக்கும் பல நிறுவனங்கள் தற்போது உலக நாடுகளுக்குத் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காகப் பணியாற்றி வருகிறது.
அந்த வகையில் தனது மாபெரும் ஐபிஓ மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்திய பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் தான் ஓரே இரவில் 350 முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்களைக் கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவன
பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முக்கிய அதிகாரிகளைத் தங்களது நிறுவனத்தில் வைத்துக்கொள்ளவும், நிறுவனத்தை வலிமையாக அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும் சம்பளத்துடன் சேர்ந்து ESOP திட்டத்தின் மூலம் அதிகளவிலான ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளைக் கொடுப்பார்கள். இது கார்பரேட் நிறுவனத்தில் சற்றுக் குறைவு.
பேடிஎம் நிறுவனம்
இப்படிப் பேடிஎம் நிறுவனத்தில் துவக்க காலத்தில் பணியாற்றிய பல முக்கியமான ஊழியர்களுக்குப் பேடிஎம் நிர்வாகம் ESOP திட்டத்தின் மூலம் நிறுவன பங்குகளைக் கொடுத்துள்ளது. தற்போது பேடிஎம் ஐபிஓ வெளியிட்டு 18,300 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது.
பேடிஎம் ஐபிஓ
பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை 2,080 - 2,150 ரூபாய் வரையிலான தொகையில் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே நிறுவனப் பங்குகளை வைத்திருக்கும் பலரின் பங்குகள் இன்று பல கோடி ரூபாய்க்கு மதிப்பிற்கு உயர்ந்துள்ளது.
350 கோ
இதன் மூலம் இந்த ஐபிஓ மூலம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய பங்குகளை வைத்துள்ள பேடிஎம் ஊழியர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 350 என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஐபிஓ வாயிலாகப் பேடிஎம் சுமார் 350 கோடீஸ்வர்களை உருவாக்கியுள்ளது.
பேடிஎம் 2010ல் ஒரு சிறு அலுவலகத்தில் துவங்கப்பட்டு இன்று 10,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
16 பில்லியன் டாலர் மதிப்பீடு
ஐபிஓ மூலம் 18,300 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்த பேடிஎம் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 16 பில்லியன் டாலர். பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடும் போது ஆங்கர் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் முதல் 2 நாட்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. 3வது நாளில் தான் பேடிஎம் ஐபிஓ பங்குகள் முழுமையாக விற்கப்பட்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications