இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நிதியியல் மற்றும் பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக 18,300 கோடி ரூபாய் என்ற வரலாற்று ஐபிஓ வெளியிட்டு உள்ளது.
இந்த ஐபிஓ-வில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் முதலீடு செய்து வரும் நிலையில் சில முன்னணி முதலீட்டு வல்லுனர்கள் பேடிஎம் ஐபிஓ மிகவும் ஆபத்தான ஐபிஓ-வாக இருக்க வாய்ப்பு உண்டு என அறிவித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேடிஎம்
இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளமாக இருக்கும் பேடிஎம் வளர்ச்சி அடையவும், விரிவாக்கம் செய்யவும் இன்னும் பல வாய்ப்புகள் இருக்கும் வேளையில் முன்கூட்டியே capitalise செய்துள்ளது என ஆல்டர் கேப்பிடல் நிறுவனத்தின் முதலீட்டு மேலாளர் ராக்கி பிரசாத் ப்ளூம்பெர்க் டிவிக்குத் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான முதலீடு
மேலும் பேடிஎம் மீடியம் டூ லாங் டர்ம் பிரிவில் மிகவும் ஆபத்தான முதலீடாக உள்ளது (very high-risk bet) எனவும் குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் பேடிஎம் நிறுவனத்தின் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் லாபத்தை அடைந்த பின்பு ஐபிஓ வெளியிட்டு இருந்தால் பார்வை முற்றிலும் மாறியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பேடிஎம் ஐபிஓ
பேடிஎம் நிறுவனத்தின் 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ நவம்பர் 8ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிய உள்ளது. ஒரு பங்கு விலை ₹2080 முதல் ₹2150 வரையிலான விலையில் ஐபிஓ முதலீட்டு திறக்கப்பட்டு உள்ளது.
ஐபிஓ முதலீடு
2வது நாள் முடிவில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 1.23 மடங்கு அதிக முதலீடுகள் குவிந்துள்ளது. ஆனால் QIB பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளை 0.46 மடங்கும், NII பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளை 0.05 மடங்கும் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
48 சதவீதம் மட்டுமே
முதன் மூலம் 18,300 கோடி ரூபாய் ஐபிஓ-வில் வெறும் 48 சதவீத தொகைக்கான முதலீடு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 10ஆம் தேதி மீதமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் குறிப்பிட விலையில் பேடிஎம் மும்பை பங்குச்சந்தையில் நவம்பர் 18ஆம் தேதி பட்டியலிடப்படும், இல்லையெனில் குறைவான விலைக்கே பட்டியலிடப்படும்.
சோமேட்டோ மேஜிக்
ஆனால் ஐபிஓ வெளியிடும் முன்பு பேடிஎம் நிறுவனத்திற்கு ஆங்கர் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தது மறுக்க முடியாது. இதேபோல் இந்தியாவில் பேமெண்ட் துறையில் அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கும் இதே வேளையில் போட்டியும் அதிகமாக உள்ளது.
சோமேட்டோ போல் பேடிஎம் நிறுவனமும் மேஜிங் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications