சென்னை: பேடிஎம் நிறுவனத்தை இயக்கும் அதன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து திங்கட்கிழமை மாலை ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விஷயம் குறித்து நிறுவனம் ஏற்கனவே தனது மார்ச் மற்றும் ஜூன் முடிவடைந்த காலாண்டுகளுக்கான நிதி முடிவுகளில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த விளக்கம் மேலும், "ஜூன் 30, 2024 மற்றும் மார்ச் 31, 2024 ஆகிய முந்தைய காலாண்டுகளுக்கான நிதி முடிவுகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்று முதலீட்டாளர்களுக்கும் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் இந்த விளக்கம் மூலம் கூறியுள்ளது.

செபி அனுப்பிய நோட்டீஸ்-ல் விஜய் சேகர் ஷர்மா ப்ரோமோட்டராக வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமா என்ற முக்கியமான கேள்வியை சுற்றி பல கேள்விகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் IPO ஆவணங்களை தாக்கல் செய்யும் போது அவர் ஒரு ஊழியராக இல்லாமல் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார்.
ஏனெனில் SEBI விதிகளின் படி ப்ரோமோட்டர் IPOக்குப் பிறகு ESOP-களைப் பெறத் தடை விதிக்கின்றன. இந்த விசாரணை ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. RBI முன்னதாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை ஆய்வு செய்தது மூலம் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து செபிக்கு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக செபி இன்று அனுப்பிய நோட்டீஸ் மூலம் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளது.
மார்ச் 31, 2022 முடிவடைந்த ஆண்டில் நிறுவனம் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 21,000,000 ஊழியர் பங்கு விருப்பங்களை வழங்கியது. இது குறிப்பிட்ட வர்த்தக மைல்கற்களை அடைந்தது மூலம் வழங்கப்பட்டது. முந்தைய காலாண்டில், நிறுவனம் SEBI-யின் SBEB விதிகளுக்கு இணங்குவது தொடர்பாக SEBI-யிடமிருந்து நோட்டீஸ் பெற்றது. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது ஆரம்ப பதிலை சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக SEBI-யிடமிருந்து கூடுதல் தகவல் பெறுவதற்காக புதிய நோட்டீஸை அனுப்பியுள்ளது.
பேடிஎம் பங்கு மும்பை பங்குச்சந்தையில் இன்று ரூ.530.05 ஆக முடிந்தது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் சுமார் ரூ. 24 குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications