பல்வேறு சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (PPBL) நிறுவனத்திற்கு புதிய பிரச்சனையாக, பண மோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் 5.49 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதியியல் நுண்ணறிவு பிரிவு (FIU), பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் (மோசடியாளர்கள்), ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

நிதியியல் நுண்ணறிவு பிரிவு (FIU), சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சில நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நெட்வொர்க் குறித்து மத்திய அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனம் மீது ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த மோசடி நிறுவனங்கள் நடத்திய சட்டவிரோத செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட பணம், பேடிஎம் வங்கி கணக்குகள் மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதை பேடிஎம் நிர்வாகம் கவனிக்காமல் இருந்தது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு 5.39 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. வாடிக்கையாளர் கணக்குத் தகவல்களை முழுமையாக அறிந்துகொள்வது (KYC) தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறைகளைப் பின்பற்ற தவறியதே இதற்குக் காரணம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், பணம் செலுத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்யவோ, அவற்றின் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவோ பேடிஎம் நிறுவனம் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணம் செலுத்துதல் மற்றும் பயனாளர் கணக்குகள் தொடர்பாக பண மோசடி தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் கணக்குத் தகவல்களை முழுமையாக அறிந்துகொள்வது (AML & KYC) ஆகிய விதிமுறைகளை பேடிஎம் நிறுவனம் பின்பற்றவில்லை என்று FIU குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாதம், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) மீறவில்லை என்று கண்டறியப்பட்டது. பரிவர்த்தனை மோசடி தொடர்பான புகார்களின் பேரில், ரிசர்வ் வங்கி பிப்ரவரி 29ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டது. பின்னர், இந்த உத்தரவு மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications