ஐபிஓ கனவில் இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேடிஎம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுத் தற்போது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. செப்டம்பர் 2021 உடன் முடிந்த காலாண்டில் கடந்த ஆண்டை விடவும் அதிகப்படியான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது பேடிஎம் பங்குகள் மீண்டும் சரியுமா என்ற கேள்வி தான் தற்போது அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்கள் எழுந்துள்ளது.
ஓமைக்ரான் வைரஸ் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் திங்கட்கிழமை வர்த்தகமும் சரிவுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேடிஎம் நிறுவனம்
பேடிஎம் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் சுமார் 481.70 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஜூன் காலாண்டில் 376.60 கோடி ரூபாயாக இருந்தது, கடந்த நிதியாண்டில் 435.50 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் வருவாய் அளவீடு
ஒருபக்கம் நஷ்டத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பேடிஎம் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீடு 64 சதவீதம் உயர்ந்து 1,086.40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு வெறும் 663.90 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
யூபிஐ அல்லாத பேமெண்ட்
இக்காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ அல்லாத பேமெண்ட் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் நிதியியல் சேவை மற்றும் இதர வருவாய் அளவீடுகள் 3 மடங்கு அதிகரித்துள்ளது எனப் பேடிஎம் தெரிவித்துள்ளது. பேடிஎம் தனது வருமானம் மற்றும் லாப அளவீடுகளை முதல் முறையாகப் பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.
வருமான வளர்ச்சி
மேலும் பேடிஎம் நிறுவனத்தின் பேமென்ட்ஸ் மற்றும் நிதியியல் சேவை பிரிவு வருமானம் 69 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 842.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் காமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து 243.80 கோடி ரூபாயாக உள்ளது.
நஷ்டத்திற்கு இதான் காரணம்
பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் பெரிய அளவில் உயர்ந்திருந்தாலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அதிகப்படியான தொகையைச் செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் லாபத்தைப் பெற முடியாமல் நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications