ஐபிஓ கனவில் இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேடிஎம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுத் தற்போது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. செப்டம்பர் 2021 உடன் முடிந்த காலாண்டில் கடந்த ஆண்டை விடவும் அதிகப்படியான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது பேடிஎம் பங்குகள் மீண்டும் சரியுமா என்ற கேள்வி தான் தற்போது அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்கள் எழுந்துள்ளது.
ஓமைக்ரான் வைரஸ் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் திங்கட்கிழமை வர்த்தகமும் சரிவுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேடிஎம் நிறுவனம்
பேடிஎம் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் சுமார் 481.70 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஜூன் காலாண்டில் 376.60 கோடி ரூபாயாக இருந்தது, கடந்த நிதியாண்டில் 435.50 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் வருவாய் அளவீடு
ஒருபக்கம் நஷ்டத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பேடிஎம் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீடு 64 சதவீதம் உயர்ந்து 1,086.40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு வெறும் 663.90 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
யூபிஐ அல்லாத பேமெண்ட்
இக்காலாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ அல்லாத பேமெண்ட் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் நிதியியல் சேவை மற்றும் இதர வருவாய் அளவீடுகள் 3 மடங்கு அதிகரித்துள்ளது எனப் பேடிஎம் தெரிவித்துள்ளது. பேடிஎம் தனது வருமானம் மற்றும் லாப அளவீடுகளை முதல் முறையாகப் பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.
வருமான வளர்ச்சி
மேலும் பேடிஎம் நிறுவனத்தின் பேமென்ட்ஸ் மற்றும் நிதியியல் சேவை பிரிவு வருமானம் 69 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 842.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் காமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து 243.80 கோடி ரூபாயாக உள்ளது.
நஷ்டத்திற்கு இதான் காரணம்
பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் பெரிய அளவில் உயர்ந்திருந்தாலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அதிகப்படியான தொகையைச் செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் லாபத்தைப் பெற முடியாமல் நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications