டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் (Paytm) சமீபத்தில் ஒரு பிரச்னையையை எதிர்கொண்டுள்ளது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான (SEBI) ஜூலை 15-ஆம் தேதி பேடிஎம் நிறுவனத்துக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதற்குக் காரணம், நிறுவனத்தின் இயக்குழு, பங்குதாரர்கள் மற்றும் கணக்குத் தணிக்கை குழுவின் ஒப்புதல் இல்லாமல், அதே நிறுவனத்தின் ஒரு பிரிவுடன் பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு.
பேடிஎம் நிறுவனம், அதே நிறுவனத்தின் ஒரு பிரிவுடன் பரிவர்த்தனை செய்ததில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைக்கு நிறுவனத்தின் இயக்கக் குழு, பங்குதாரர்கள் மற்றும் கணக்குத் தணிக்கை குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை. இது நிதி சம்பந்தப்பட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் ஜூலை 15-ஆம் தேதி அன்று பேடிஎம் நிறுவனத்துக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

செபியின் இந்த நடவடிக்கை காரணமாக, நிறுவனத்தின் பங்குகள் 2% வீழ்ச்சியடைந்து, செவ்வாய்க்கிழமை ரூ.459.75 என்ற விலையில் முடிவடைந்தது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க்கின் வணிக நடவடிக்கைகளை நிறுத்தியதில் இருந்து, ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (OCL) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜனவரியில் மாதத்தில் இருந்து வீழ்ச்சியடைய தொடங்கியது. பங்கின் விலை ரூ.761-இல் இருந்து கிட்டத்தட்ட 40% வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (OCL) பேடிஎம் நிறுவனத்தை இயக்குகின்ற பட்டியலிடப்பட்ட ஃபின்டெக் நிறுவனம் ஆகும். நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், செபி நிறுவனம், ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2021-22 ஆம் ஆண்டில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியிடம் இருந்து ரூ.1,309 கோடி நிதியைப் பயன்படுத்தியதாகவும், OCL நிறுவனம், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ.1,086 கோடி மதிப்பிலான சேவைகளை வழங்கியதாகவும் தெரிவித்தது. இதில், ரூ.360 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு இயக்குழு, பங்குதாரர்கள் தணிக்கை குழுவின் ஒப்புதல் இல்லை.
"மேற்கண்ட விதி மீறல்கள் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. எனவே, எதிர்காலத்தில் நீங்கள் கவனமாக இருக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் எச்சரிக்கப்படுகிறீர்கள். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று செபி தனது கடிதத்தில் OCL நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.
செபியின் கடிதத்திற்கு பதிலளித்த நிறுவனம், பட்டியலிடல் விதிமுறைகள் அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், காலப்போக்கில் இந்த விதிமுறைகளில் எந்தவித புதுப்பிப்புகள் செய்யப்பட்டாலும் அவற்றையும் கடைப்பிடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications