நீண்ட காலத்திற்குப் பின் உலகளவில் பர்சனல் கம்பியூட்டர் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் அதாவது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பர்சனல் கம்பியூட்டர் பிரிவில் 9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
முதல் காலாண்டில் உலகளவில் வர்த்தகப் போக்குவரத்திற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் 2வது காலாண்டில், தேவை அதிகரித்து விற்பனையும் அதிகரித்து 9 சதவீத வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த அதிரடி வளர்ச்சிக்கு கொரொனா முக்கியக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா-வால் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் Work from home, வீட்டிலேயே பள்ளி கல்வி, வீட்டிலேயே பொழுதுபோக்கு என மாறிவிட்ட நிலையில் டெஸ்க்டாப், லேப்டாப், மற்றும் வொர்க்ஸ்டேஷன்-களின் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
7.29 கோடி விற்பனை
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உலகம் முழுவதும் சுமார் 7.29 கோடி டெஸ்க்டாப், லேப்டாப், மற்றும் வொர்க்ஸ்டேஷன் விற்பனை ஆகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் 2019ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையை விடவும் இந்த 3 மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பிசி-களை விட 1 சதவீதம் அதிகம்.
உற்பத்தி
மக்கள் மத்தியில் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் இத்தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டத்துடன் டெஸ்க்டாப், லேப்டாப், மற்றும் வொர்க்ஸ்டேஷன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணிகளைத் துரிதப்படுத்தி அதிகளவிலான தொகையை உற்பத்தி மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீடு செய்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் விற்பனையான 7.29 பர்சனல் கம்பியூட்டர்களில் 1.81 கோடி பிசிகளை ஹெச்பி விற்பனை செய்து சுமார் 24.8 சந்தையைக் கைப்பற்றி விற்பனையிலஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதைதொடர்ந்து லெனோவோ 1.74 கோடி பிசி-களையும், டெல் 1.2 கோடி பிசி-களையும், ஆப்பிள் 53லட்சம், ஏசர் 49 லட்சம் பிசி-களை விற்பனை செய்யு அசத்தியுள்ளது.
மொபைல் ஆதிக்கம்
பிசி விற்பனையில் இக்காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா சந்தையில் சிறப்பான வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஆசிய சந்தையில் முதல் முறையாக அதிநவீன ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் முதல் தலைமுறையினர் இருக்கும் காரணத்தால் ஆசிய சந்தையில் பர்சனல் கம்பியூட்டர்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் இல்லை என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஆசிய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications