முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வருகிற மார்ச் 18ஆம் தேதி 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகளவிலான எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் 2வது விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர்.
உக்ரைன் - ரஷ்யா போருக்குப் பின் இந்தியா விவசாயப் பொருட்களுக்குச் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் விவசாய பட்ஜெட்டில் வரும் அறிவிப்பில் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
2வது விவசாயப் பட்ஜெட்
முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது 2வது விவசாயப் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம், நெல்லுக்கு அதிகக் கொள்முதல் விலை, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் வழங்குவது போல் உள்ளீட்டு மானியம், விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்விக் கடன் தள்ளுபடி, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளாக உள்ளது.
ஓய்வூதியம்
58 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண் விவசாயிகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் விவசாயிகளுக்கும் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 3,000 பென்ஷன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கும் நிலையில் அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் விரைவில் எடுத்து இந்தப் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளி வருமா என்ற ஏக்கம் அனைத்து விவசாயிகளிடமும் இருக்கிறது.
தெலுங்கானா, ஆந்திரா
தெலுங்கானா மாநிலம் விவசாயிகளின் முதலீட்டு ஆதரவுத் திட்டத்தின் (Rythu Bandhu Scheme) கீழ் ஆண்டுக்கு இரண்டு பயிர்களுக்கு உள்ளீட்டு மானியமாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்குகிறது. இதையடுத்து ஆந்திர மாநிலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,500 வழங்க தொடங்கியுள்ளது. இதேபோன்ற மானியத்தைத் தமிழக விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.
மின்சார இணைப்பு
சுமார் 75,000 சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் பம்ப் செட்களை இயக்குவதற்குக் கட்டண மின்சாரத்தை நம்பியிருக்கிறார்கள். இந்த இணைப்புகளை இலவச மின் இணைப்புகளாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கைக்கும் வைக்கப்பட்டு உள்ளது.
கேரளா நெல் விலை
கேரளாவில் 2020 முதல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,795 ரூபாய் (எம்எஸ்பி ஊக்கத்தொகையுடன்) வழங்கி வருவதாகவும், சாகுபடி செலவை பொறுத்துத் தமிழகம் குவிண்டாலுக்கு 3,675 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறியுள்ளார். தற்போது, தமிழ்நாடு மாநிலத்தில் நெல் ரகத்திற்கு (ஊக்கத்துடன்) கொள்முதல் விலை ரூ.2,060 ஆகவும், பொது ரகத்துக்கு ரூ.2,015 ஆகவும் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications