பெங்களூருவின் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் ரோபோட்டிக்ஸ் வளர்ச்சி வீட்டு நிர்வாகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இவற்றின் புகுத்தல்களால், மக்கள், வீட்டு வேலைகளுக்கான பரம்பரை முறைகளை முற்றிலும் மாற்றியமைத்து வருகின்றனர். அதாவது, இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், வேலையாட்கள் இல்லாமல், வீட்டு வேலைகளை சுலபமாக முடிக்கும் வகையில், ஏஐ மற்றும் ரோபோட்டிக்ஸ்-களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில், மக்கள் தங்களின் வீட்டு வேலைகளுக்காக ஆட்டோமேட்டட் சாதனங்கள் மற்றும் ரொபோட்டுகளை தேர்வு செய்து வருகின்றனர். சுத்தம் செய்தல் மற்றும் சமையல் பணிகளில் தற்போது ரோபோட்டுகள் முக்கிய இடத்தை பிடித்து, அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்து வருகின்றன என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சமையலறை ரோபோக்கள்: ஏழு மாதங்களுக்கு முன்பு, பெங்களூருவின் ஹெப்பால் பகுதியில் வசிக்கும் மணிஷா ராய் என்பவர், தன்னுடைய சமையல்காரருக்கு பதிலாக ஒரு உயர் தொழில்நுட்ப கிச்சன் ரோபோட்டை பயன்படுத்தத் தொடங்கினார். இந்த முடிவு, அவரது அன்றாட வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது, "இப்போது நான் சமையல் நடந்து கொண்டிருக்கும் போது மற்ற வீட்டு வேலைகளை செய்துவிடுகிறேன், ஏனெனில் எனது உணவு எதுவும் கருகாது என்று எனக்கு தெரியும். இந்த ரோபோ, சமையலை வேடிக்கையாகவும், வேகமாகவும் எளிதாகவும் செய்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ரோபோ, முன் திட்டமிடப்பட்ட சமையல் குறிப்புகள் அனைத்தையும் கவனிக்கின்றன. அதாவது, காய்கறிகள் நறுக்குதல் மற்றும் எண்ணெயில் வதக்குதல், வேகவைத்தல் மற்றும் பிசைதல் வரை அனைத்தையும் தானாகவே கையாளுகின்றன. இதில், மணிஷா செய்ய வேண்டியது ஒன்றுதான், தேவையான பொருட்களை அந்த ரோபோவில் சேர்க்க வேண்டும்; அதற்குப் பிறகு அந்த இயந்திரம் தான் தன்னுடைய மாயாஜாலத்தைப் போல வேலை செய்து, உணவை சுவையாக தயார் செய்து விடுகிறது.
அதாவது, இந்த ரோபோட்டின் டிஸ்பிளேவில் காட்டப்படும் ரெசிபிக்கு ஏற்றவாறு, தேவையான பொருட்களை மட்டும் நான் சேர்க்கிறேன். அதற்குப் பிறகு, காய்கறிகளை நறுக்குதல் முதல் வதக்குதல் வரை எந்த ஒரு பணிக்காகவும் நான் அருகில் இருக்கவே தேவையில்லை. ரோபோட் எல்லாவற்றையும் தானாக கவனித்து விடுகிறது, என்று மணிஷா கூறுகிறார். இது மணிஷாவின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, மேலும் அது செலவிலும் மிச்சம் ஆகிறது. வேலைக்காரருக்குத் தர வேண்டிய மாத சம்பளத்திற்கும், சமையல் ரொபோட்டின் ஒரே முறை முதலீட்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதால், இதை அவர் மிகவும் செலவுச்சூழ்நிலைக்கு ஏற்ற தீர்வாக கருதுகிறார்.
"முந்தைய காலத்தில் நான் வேலைக்காரருக்கு மாதம் ரூ.2,500 வழங்கி வந்தேன். ஆனால், பல வேலைகளையும் நான் தான் நேரடியாக செய்ய வேண்டி வந்தது என மணிஷா ராய் தெரிவித்துள்ளார். "ஆனால், இப்போது, இந்த ரோபோட்டின் உதவியால், நான் ஆண்டுக்கு ரூ.9,000 வரை சேமிக்கிறேன். அதுவும் மிக விரைவாக இந்த ரோபோட் தனது செலவை குறைத்து பணத்தை மிச்சப்படுத்தியது என்றும் அவர் கூறினார். அதற்காக மட்டும் அல்ல, அவருடைய கணவர் நவீன் கூட தற்போது சமையலில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்து விட்டதாகவும், இந்த ரொபோட்டின் உதவியுடன் எளிதாக சுவையான உணவுகளை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
சுத்தம் செய்யும் ரோபோ: இதேபோல், கட்டிடக் கலைஞரான மீரா வாசுதேவ், 18 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டை சுத்தம் செய்ய பணிப்பெண்ணுக்கு பதிலாக ரோபோடிக் சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்தத் தொடங்கினார். ரோபோக்கள் அவரது வீட்டைச் சுற்றிச் சுத்தம் செய்து, வேலையை முடித்த பிறகு தங்கள் சார்ஜிங் டாக்குகளுக்குத் திரும்புகின்றன. இந்த ரோபோட்டுகள் மேற்பரப்பை சுத்தமாகச் செய்யும் பணியில் சிறந்த வேலை செய்கின்றன, ஆனாலும், மெல்லிய தூசி மற்றும் விடாப்படியான கறைகளை போக்க மீரா ஒரு வாக்யூம் பயன்படுத்துகிறார். அந்தவகையில், மீரா தற்போது, ஆழமான சுத்தம் செய்யும் ரோபோட்டின் ரசிகையாக மாறிவிட்டார். இந்த சேவை இந்தியாவில் மிகவும் பொதுவானதாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
ரோபோட்டுகள் அன்றாட வீட்டு வேலைகளை மாற்றி அமைக்கின்றன, அதோடு பழமையான பாலின அடிப்படையிலான மரபுகளை முறியடித்து வருகின்றன. இப்போது, ஆண்களும் சமையலுக்குள் பங்கு பெற்றுவருகின்றனர் மற்றும் வீட்டுத் திட்டங்களில் மேலும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக, மணிஷாவின் கணவர் நவீன், கிச்சன் ரோபோட்டின் உதவியுடன் சமையலில் ஆர்வம் ஏற்படுத்தி, இப்போது தனது குடும்பம் விரும்பிய உணவுகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளார். "அவர் ரோபோட்டின் உதவியுடன் சுவையான உணவுகளை தயாரிக்கிறார், மற்றும் அதன் மூலம் வந்த முடிவுகளால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்," என மணிஷா கூறினார்.
ஒரு புதிய வகையான சுதந்திரம்: இதேபோல், கோரமங்கலாவைச் சேர்ந்த ரேணுகா குருநாதன் போன்ற பலருக்கு, அன்றாட வேலைகளை தானியங்கி முறையில் செய்தல் என்பது சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் உள்ளது. "உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு வெளியாட்களை சார்ந்து இருக்காமல் இருப்பது உண்மையிலேயே ஒரு விடுதலையான அனுபவமாகும்," என்று அவர் கூறினார். மேலும், ரேணுகா தரையை சுத்தம் செய்யும் ரோபோ மற்றும் பாத்திரங்களை கழுவும் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார், அவை மனதிற்கு அமைதியை வழங்குவதாகவும் கூறுகிறார்.
இந்த உயர் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், சில வீடுகளில் அவ்வப்போது ஆழமான சுத்தம் செய்தல் அல்லது பிற சிறப்புப் பணிகளுக்கு வீட்டுப் பணியாளர்களை நம்பியுள்ளன. ஆனால் ரோபோ தொழில்நுட்பம் தொடர்ந்து உருவாகி வருவதால், வீட்டு நிர்வாகத்தின் எதிர்காலம் மனித உதவி மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் சரியான கலவையாக இருக்கலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் பெங்களூருவில், ரோபோக்கள் வந்துவிட்டன. அவை ஆங்கேயே தங்கிவிட்டன என்றும் கூறலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications