மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு செலுத்தும் கமிஷனை உயர்த்தியுள்ளன. இதனால் ரீடைல் சந்தையில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதையும் உறுதி செய்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் (IOC) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கொன்று தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, டீலர்-களுக்கான கமிஷன் தொகை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது" என்று தெரிவித்துள்ளது.

இந்த கமிஷன் தொகை எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தில் இருந்து அளிக்கப்படுவதால் ரீடைல் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் விற்பனை மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், இது குறித்த விரிவான தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
தற்போது, டீலர்களுக்கு பெட்ரோலுக்கு ஒகு கிலோ லிட்டருக்கு அதாவது 1000 லிட்டருக்கு ரூ.1,868.14 மற்றும் 0.875 சதவீத உற்பத்தி விலை கமிஷனும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.1,389.35 மற்றும் 0.28 சதவீத உற்பத்தி விலை கமிஷனும் வழங்கப்படுகிறது.
தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ள கமிஷன் தொகை மூலம் சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் மற்றும் வாடிக்கையாளர் சேவை தரநிலைகளை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி இதுகுறித்து கூறுகையில், மாநிலங்களுக்குள்ளான போக்குவரத்து கட்டணத்தை ஒழுங்குபடுத்துவது மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் டெப்போக்களிலிருந்து தொலைவில் உள்ள இடங்களில் வசிக்கும் நுகர்வோருக்கு பயனளிக்கும், இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்தீப் சிங் பூரி ட்விட்டரில் செய்த பதிவின் பிடி இனி ஒடிசாவின் குனன்பாளி மற்றும் கலிமெலாவில் பெட்ரோல் விலை ரூ.4.69 மற்றும் ரூ.4.55 முறையே குறையும், டீசல் விலை ரூ.4.45 மற்றும் ரூ.4.32 முறையே குறையும் என்று எடுத்துக்காட்டாக கூறினார்.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications