இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் நேற்றும், இன்றும் பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இதன் விலையில் எவ்விதமான உயர்வும் செய்யாமல் மக்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டு உள்ளது.
இதேவேளையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது, ஆனாலும் இந்தியாவில் இதன் விலையைக் குறைக்காமல் அப்படியே வைத்துள்ளது மக்களைப் பாதிக்கிறது.
மேலும் இந்தியா முழுவதும் தற்போது தசரா மற்றும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை எனச் சந்தையில் கருத்து நிலவுகிறது.
பெட்ரோல், டீசல் விலை
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை என்றாலும், இந்தியாவில் எரிபொருள் விலை வரலாற்று உச்சத்தில் உள்ளது.
செப்டம்பர் 5 முதல்
செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து பெட்ரோல், டீசல் விலை OPEC கூட்டத்திற்குப் பின்பு தொடர்ந்து விலையை அதிகரித்து வருகிறது. மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் அதிகப்படியான வரி வருமானம் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து விலையை உயர்த்தி வந்தது.
சப்ளை டிமாண்ட் பிரச்சனை
ஆனால் இதேவேளையில் உலக நாடுகளில் அதிகப்படியான எரிபொருள் தேவை இருக்கும் காரணத்தாலும், கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிய அளவில் அதிகரிக்கப்படாத காரணத்தாலும் சப்ளை டிமாண்ட் பிரச்சனையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 75 டாலரில் இருந்து 83 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
கடந்த 2 நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிவை சந்தித்துள்ள போதிலும் இந்தியாவில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.25 ரூபாயாக உள்ளது.
சென்னை பெட்ரோல் டீசல் விலை
இரண்டு நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.79 ரூபாய்க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 97.59 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications