இந்தியாவில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் சுத்திகரிப்புச் செலவுகள் எனப் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையைத் தொடர்ந்து புதன்கிழமையும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 முதல் 30 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 24 - 29 பைசா வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று ரீடைல் சந்தை நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.30 ரூபாயில் இருந்த 87.60 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் டீசல் விலை 77.48 ரூபாயில் இருந்து 77.73 ரூபாயாக உயர்ந்துள்ளது
இதைத்தொடர்ந்து மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94.12 ரூபாயாகவும், டீசல் 84.63 ரூபாயும், கொல்கத்தாவில் பெட்ரோல் 88.92 ரூபாயும், டீசல் 81.31 ரூபாயாகவும் உள்ளது. சென்னையில் பெட்ரோல் 89.26 ரூபாயாகவும், டீசல் 82.90 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.