இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தைக்குப் பெட்ரோல், டீசல் விலை பெரும் சுமையாக உள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் சாமானிய மக்களும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை இன்றைய உயர்வு
ஒரு நாள் இடைவேளையில் இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் விலை 22 முதல் 25 பைசா வரையிலும், டீசல் விலை 12 முதல் 14 பைசா வரையிலும் உயர்ந்துள்ளது. இன்றைய உயர்வின் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
மும்பையில் புதிய உச்சம்
இன்றைய விலை உயர்வின் மூலம் நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.82 ரூபாய் அளவிற்கு உயர்ந்து வரலாற்று உச்சத்தைப் பெற்றுள்ளது. மே 29ஆம் தேதி முதல் முறையாக மும்பையில் 100 ரூபாயைக் கடந்துள்ள நிலையில் தற்போது 102.82 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 97.91 ரூபாய்
டெல்லி : 96.66 ரூபாய்
கொல்கத்தா : 96.58 ரூபாய்
மும்பை : 102.82 ரூபாய்
பெங்களூர் : 99.89 ரூபாய்
ஹைதராபாத் : 100.46 ரூபாய்
கோழிக்கோடு : 97.07 ரூபாய்
டீசல் விலை உயர்வு
இன்றைய டீசல் விலை நிலவரம்
சென்னை : 92.04 ரூபாய்
டெல்லி : 87.41 ரூபாய்
கொல்கத்தா : 90.25 ரூபாய்
மும்பை : 94.84 ரூபாய்
பெங்களூர் : 92.66 ரூபாய்
ஹைதராபாத் : 95.28 ரூபாய்
கோழிக்கோடு : 92.42 ரூபாய்
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இதேவேளையில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.87 சதவீதம் உயர்ந்து 72.75 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.96 சதவீதம் வளர்ச்சி அடைந்து 74.70 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பு
அமெரிக்கா, ஐரோப்பியச் சந்தைகள் வளர்ச்சி அடையத் துவங்கியுள்ள வேளையில் இந்நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாத காரணத்தால் இதன் விலையில் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சாமானிய மக்களுக்குப் பாதிப்பு
பெட்ரோல், டீசல் விலையால் சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு எனக் கேட்பவர்களுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான மொத்த விலை பணவீக்கம் சிறந்த உதாரணம். நாட்டின் மொத்த விலை பணவீக்கம் வரலாறு காணாத விதமாக 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் இதன் அளவீடு 10.5 சதவீதமாக இருந்தது.
உணவு பணவீக்கம்
எரிபொருள் மற்றும் மின்சாரம் பணவீக்கம் மே மாதத்தில் 37.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் உணவு விலை பணவீக்கமும் 7.58 சதவீதத்தில் இருந்து 8.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications