தேர்தல் முடிந்த பின்னர் மே 4-க்கு பிறகு ஐந்தாவது முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் இருந்த நிலையில் 18 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே 4-க்கு பிறகு ஒரு நாள் தவிர தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
அதிலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்தியாவிலேயே பல இடங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிப்பொருள் தேவையான குறைந்துள்ளது. அப்படி இருப்பினும் பெட்ரோல் விலையானது மீண்டும் செஞ்சுரி அடுத்து விட்டதே எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.
சைபர் தாக்குதல்
இந்தியாவில் எரிபொருள் விலையானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தினை பொறுத்து, இந்தியாவிலும் விலையில் மாற்றம் செய்யப்படும். இதற்கிடையில் அமெரிக்காவின் முன்னணி எண்ணெய் நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதலினால் எண்ணென் ஆலை மூடப்பட்டது. இதனால் எண்ணெய் சப்ளையானது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும் விலை சற்று அதிகரித்துள்ளது.
உற்பத்தி குறைப்பு
அதோடு கடந்த ஆண்டே கொரோனா பரவலின் காரணமாக, கச்சா எண்ணெய் தேவையானது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்போது விலையும் மைனசில் சென்றது. ஒரு சில இடங்களில் உற்பத்தி அதிகரித்த நிலையில், அதனை வைக்க கூட இடமில்லாமல் நிறுவனங்கள் தவித்தன. இந்த நிலையில் தான் உற்பத்தியும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் அதிகரித்து வரும் பரவலுக்கு மத்தியிலும் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆக இதுவும் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.
இன்றைய கச்சா எணணெய் விலை
தற்போது WTI கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 0.51% அதிகரித்து, 65.28 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே போல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு 0.54% அதிகரித்து 68.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே உள்ளது. இந்த நிலையில் அதிகளவு இறக்குமதி செய்யும் இந்தியாவில் விலை அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் வரி விகிதமும் அதிகம்
இந்தியாவினை பொறுத்தவரையில் கச்சா எண்ணெய் விலையோடு சேர்த்து, மக்கள் அதிகளவு வரியினையும் செலுத்துகின்றனர். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்ட நிலையில், அரசு 1 லிட்டர் பெட்ரோலுக்கு 21.58 ரூபாய் வரியும், டீசலுக்கு 19.18 ரூபாயும் வரியும் அதிகரித்த பிறகு, பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியது.
இன்றைய விலை நிலவரம்
- டெல்லி - ரூ.91.53
- கொல்கத்தா - ரூ.91.66
- மும்பை - ரூ.97.86
- சென்னை - ரூ.93.38
- பெங்களுர் - ரூ.93.61
- டெல்லி - ரூ.82.06
- கொல்கத்தா - ரூ.84.90
- மும்பை - ரூ.89.17
- சென்னை - ரூ.86.96
- பெங்களுர் - ரூ.86.99
மகாராஷ்டிராவின் சில இடங்களில் பெட்ரோல் விலையானது 100 ரூபாயினை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!



Click it and Unblock the Notifications