இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் மக்களுக்குச் சாதகமாக மாறி வருகிறது. இந்நிலையில் 45 நாட்களில் 2 முறை விலை சரிந்த பின்பு கடந்த 4 நாட்களாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலைப்பெற்றுள்ளது.
இதன் மூலம் இன்று நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.56 ரூபாயும், டீசல் 80.87 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பெட்ரோல் மும்பையில் 96.98 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 90.77 ரூபாய்க்கும், சென்னையில் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரி மாதம் முதல்
பிப்ரவரி மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 7 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெட்ரோல் விலை 4.22 ரூபாயும், டீசல் விலை 4.34 ரூபாய் என 14 முறைகளில் விலை உயர்ந்துள்ளது. ஆனால் பிப்ரவரி 27க்குப் பின் எரிபொருள் விலை உயரவில்லை.
கச்சா எண்ணெய் விலை
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்திற்கு ஏற்ப இந்திய ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இந்தக் குறைப்பிற்குப் பின் கடந்த 4 நாட்களாக எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிலைப்பெற்று உள்ளது. செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு மூலம் பெட்ரோல் விலை 22 பைசாவும், டீசல் 23 பைசாவும் குறைந்துள்ளது சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் பெறும் அளவிலான வரவேற்பு பெற்றுள்ளது.
5 மாநில தேர்தல்
2021ஆம் ஆண்டில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு சுமார் 24 நாட்கள் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் விலை குறைந்தது. இதன் பின்பு 5 நாட்கள் இடைவேளையில் மார்ச் 30ஆம் தேதி மீண்டும் விலை குறைந்தது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications