பெட்ரொல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் மட்டும் தான் இன்னும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்குள் வராமல் இருக்கின்றன.
எனவே இந்த பொருட்கள் மீது, இப்போது வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் கலால் வரி முதல் வாட் வரி வரை பல வரிகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதோடு மற்ற சில கூடுதல் வரிகளையும் மத்திய அரசு விதித்து வசூலித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று தான் இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி.
சமீபத்தைய உயர்வு
கடந்த மார்ச் 14, 2020 அன்று தான் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு. ஆனால் இந்த முறை மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) உயர்த்தி இருக்கிறார்கள்.
பெட்ரோல்
இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 10 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை, தற்போது 18 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு மத்தியில், இந்த வரி வரம்பு உயர்வு, வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக வந்து விழுந்து இருக்கிறது.
டீசல்
அதே போல, ஒரு லிட்டர் டீசலில் மத்திய அரசு 4 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை, தற்போது 12 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. பொதுவாக டீசல் விலை அதிகரித்தால், அது ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் விலை ஏற்றத்தைக் கொண்டு வரும் என்பார்கள்.
என்ன பயன்
இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) அதிகரிப்பதால் நமக்கோ அல்லது அரசுக்கோ என்ன பயன் என்று கேட்கிறீர்களா..? இனி வரும் காலங்களில் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை அதிகரிக்க வேண்டும் என்றால் ஒரு லிட்டருக்கு 18 மற்றும் 12 ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு தான் இன்றே வரம்புகளை அதிகரித்து இருக்கிறார்களாம்.
More From GoodReturns

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications