பெட்ரொல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் மட்டும் தான் இன்னும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்குள் வராமல் இருக்கின்றன.
எனவே இந்த பொருட்கள் மீது, இப்போது வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் கலால் வரி முதல் வாட் வரி வரை பல வரிகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதோடு மற்ற சில கூடுதல் வரிகளையும் மத்திய அரசு விதித்து வசூலித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று தான் இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி.
சமீபத்தைய உயர்வு
கடந்த மார்ச் 14, 2020 அன்று தான் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு. ஆனால் இந்த முறை மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) உயர்த்தி இருக்கிறார்கள்.
பெட்ரோல்
இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 10 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை, தற்போது 18 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு மத்தியில், இந்த வரி வரம்பு உயர்வு, வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக வந்து விழுந்து இருக்கிறது.
டீசல்
அதே போல, ஒரு லிட்டர் டீசலில் மத்திய அரசு 4 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை, தற்போது 12 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. பொதுவாக டீசல் விலை அதிகரித்தால், அது ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் விலை ஏற்றத்தைக் கொண்டு வரும் என்பார்கள்.
என்ன பயன்
இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) அதிகரிப்பதால் நமக்கோ அல்லது அரசுக்கோ என்ன பயன் என்று கேட்கிறீர்களா..? இனி வரும் காலங்களில் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை அதிகரிக்க வேண்டும் என்றால் ஒரு லிட்டருக்கு 18 மற்றும் 12 ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு தான் இன்றே வரம்புகளை அதிகரித்து இருக்கிறார்களாம்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications