இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிந்த பின்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்துத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பு சுமார் 18 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் இருந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை
இந்நிலையில் இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை 34-35 பைசா வரையில் நாடு முழுவதும் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை எனவும் அறிவித்துள்ளது.
டீசல் விலை மாற்றமில்லை
டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது வர்த்தகர்கள் மத்தியிலும், விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.
லாக்டவுன் தளர்வுகள்
ஆனால் நாடு முழுவதும் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் போக்குவரத்து அதிகரிக்கும் வேளையில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிப்பது மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுமையாக உள்ளது.
டெல்லியில் 100 ரூபாய்
இன்றைய விலை உயர்வின் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத வகையில் 99.86 ரூபாய் அளவில் உள்ளது. அடுத்த விலை உயர்வு நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் போது நாட்டின் பிற முக்கிய நகரங்கள் போல் டெல்லியிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விடும்.
பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 100.75 ரூபாய்
டெல்லி : 99.86 ரூபாய்
கொல்கத்தா : 99.84 ரூபாய்
மும்பை : 105.92 ரூபாய்
பெங்களூர் : 103.20 ரூபாய்
ஹைதராபாத் : 103.78 ரூபாய்
கோழிக்கோடு : 100.27 ரூபாய்
டீசல் விலை நிலவரம்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம்
சென்னை : 93.91 ரூபாய்
டெல்லி : 89.36 ரூபாய்
கொல்கத்தா : 92.27 ரூபாய்
மும்பை : 96.91 ரூபாய்
பெங்களூர் : 94.72 ரூபாய்
ஹைதராபாத் : 97.40 ரூபாய்
கோழிக்கோடு : 94.48 ரூபாய்