இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கை மேலும் கடுமையாகி வருகிறது.
நாடு முழுவதும் மாநில அரசுகள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருப்பதால் மக்கள் வெளியில் செல்லவில்லை என்றாலும் மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் உணவுப் பொருட்களில் விலை போக்குவரத்து செலவுகளுக்கும் இருக்கும் காரணத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
14 முறை விலை உயர்வு
இந்த வாரத்தில் 2வது முறையாகவும், மாதத்தில் 14 முறையாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிகரித்துள்ளது.
பயமுறுத்தும் மும்பை விலை
இதன் மூலம் இன்று மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 பைசா உயர்ந்து 99.94 ரூபாய்க்கும், டீசல் விலை 30 பைசா உயர்ந்து 91.87 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் ப்ரீமியம் பெர்டோல் விலை 100 ரூபாயை தாண்டி பல நாட்கள் ஆன நிலையில், தற்போது சாதாரணப் பெட்ரோல் விலை இன்றைய விலை உயர்வின் மூலம் 100 ரூபாய் விலை அடைய வெறும் 6 பைசா குறைவாக உள்ளது.
சென்னை பெட்ரோல், டீசல் விலை
மும்பையைத் தொடர்ந்து டெல்லியில் பெட்ரோல் 93.68 ரூபாய்க்கும், டீசல் 84.61 ரூபாய்க்கும், சென்னையில் பெட்ரோல் 95.28 ரூபாய்க்கும், டீசல் 89.39 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் பெட்ரோல் 93.72 ரூபாய்க்கும், டீசல் 87.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
போபால் மாநிலம்
இந்தியாவிலேயே போபால் மாநிலத்தில் தான் பெட்ரோல் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. போபால் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.77 ரூபாய்க்கும், டீசல் 93.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications