மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சொல்லப்போனால் இந்த கொரோனாவின் வருகைக்கு பின்பு தனி மனித இடைவெளி, பொதுப் போக்குவரத்து தடை, சுகாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இதற்கிடையில் இன்று தொடர்ந்து ஆறாவது நாளாக பெட்ரோல் விலையானது அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக மெட்ரோ நகரங்களாக டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சில நகரங்களில் பெட்ரோல் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. இன்று மட்டும் விலை லிட்டருக்கு 11 பைசா அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த ஆகஸ்ட் 16லிருந்து பெட்ரோல் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 19ல் மட்டும் ஏற்றம் காணவில்லை.
பெட்ரோல் விலை நிலவரம்
டெல்லியில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 1.3 ரூபாயும், மும்பையில் 1.2 ரூபாயும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று டெல்லி பெட்ரோல் விலையானது 81.73 ரூபாயாகவும், இதே மும்பையில் பெட்ரோல் விலையானது 88.39 ரூபாயாகவும் உள்ளது. இதே மற்ற மெட்ரோ நகரங்களான, சென்னையில் லிட்டருக்கு 84.73 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 83.24ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 84.94 ரூபாயாகவும், இதே பெங்களூருவில் 79.89 ரூபாயாகவும், நொய்டாவில் 82.09 ரூபாயாகவும் காணப்படுகிறது.
டீசல் விலை நிலவரம்
எனினும் இன்று டீசல் விலையில் மாற்றமில்லை. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 73.56 ரூபாயாகவும், மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 80.11 ரூபாயாகவும், இதே சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 78.86 ரூபாயாகவும், கொல்கத்தாவில் டீசல் விலை லிட்டருக்கு 77.06 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் டீசல் விலை லிட்டருக்கு 80.17 ரூபாயாகவும், பெங்களூருவில் டீசல் விலை லிட்டருக்கு 77.88 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சர்வதேச சந்தையில் wti கச்சா எண்ணெய் விலையானது 0.14% சரிந்து காணப்படுகிறது. தற்போது பேரலுக்கு 0.06 டாலர்கள் குறைந்து 42.56 டாலர்களாக காணப்படுகிறது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 0.18% ஏற்றம் கண்டும் காணப்படுகிறது. இது தற்போது பேரலுக்கு 0.10 டாலர் அதிகரித்து 45.75 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைவு
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக எண்ணெய் உற்பத்தியானது பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உற்பத்தியே குறைந்தாலும், அது பெருமளவில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை எனலாம். எனினும் உற்பத்தி குறைவு காரணமாக விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications