பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. ஸ்தம்பித்த வட மாநிலங்கள்.. என்ன காரணம்..?

செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய டிரக், டாக்சி மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்திற்கு மத்தியில், மும்பையில் வடாலாவின் மஹுலில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் வளாகத்தில் இருந்து தனியார் விநியோகஸ்தர்களின் டிரக்குகள் வெளியேற அனுமதிக்கப்படாததால், மும்பையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

கிட்டதட்ட இதே நிலைதான் இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவுகிறது. ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசல் இருந்தும் மக்கள் பயத்தில் அதிகளவில் வாங்க குவிந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. ஸ்தம்பித்த வட மாநிலங்கள்.. என்ன காரணம்..?

மும்பையில் உள்ள உணவகங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. பிபிசிஎல் ஆலையில் தனியார் விநியோகஸ்தர்களின் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் வணிக எரிவாயு சிலிண்டர்கள் லோடு செய்யப்பட்டு அதன் வளாகத்திற்குள்ளேயே சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் பிரபலமான சகினாகா மற்றும் மீரா சாலையில் உள்ள பெட்ரோல் பம்புகளில் பைக்குகளில் மக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். இதேபோல் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள சில பெட்ரோல் பம்புகள் திங்கள்கிழமை முதல் செயல்படுவதை நிறுத்தியதாகப் பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தின் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிதாக நிறைவேற்றப்பட்ட பாரதீய நியாயச் சன்ஹிதா சட்டத்தின் கீழ் hit-and-run வழக்குகளுக்கு ரூ.7 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டுச் சிறை தண்டனை வழங்குவதை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் போராட்டத்தை டிரக், டாக்சி மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் நடத்தி வருகின்றனர்.

இன்னும் நடைமுறைக்கு வராத இந்த விதிகள், வாகன ஓட்டிகளுக்குத் தேவையற்ற பாதிப்புகளை வழிவகுக்கும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்துக் காங்கிரஸ் கூறியது.

மகாராஷ்டிரா உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாடு மற்றும் அதன் தாக்கம் குறித்துக் கவலை தெரிவித்து மும்பை போலீஸ் கமிஷனர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தது.

இந்தப் பாதிப்புத் தற்போது ஒவ்வொரு மாநிலங்களாகப் பாதிக்கப்பட்டு வருகிறது, ஹைதராபாத், நாக்பூர் நகரங்களைத் தாண்டி, ஹிமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எரிபொருள், எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகத் துவங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+