இந்தியாவில் பணி புரியும் ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும், வயதான காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் பணிபுரியும் போதே தங்களுக்கு தேவைப்படும் நிதியை உருவாக்க உதவி செய்யும் வகையிலும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) செயல்பட்டு வருகிறது. EPFO அமைப்பால் வழங்கப்படும் ஒரு திட்டம் தான் "ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம்" (EPF). இந்த திட்டத்தில் பணிபுரியும் போதே ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பங்களிக்க வேண்டும்.
அதன் பிறகு தேவைப்படும் நேரத்தில் இந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இதற்கு வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே வேலை செய்யும் போது மாதம் மதம் குறிப்பிட்ட தொகையை பங்களிப்பதன் மூலம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு யாரையும் சார்ந்திருக்காமல் அந்த பணத்தை பயன்படுத்தி பலனடையலாம்.

இந்நிலையில் ஊழியர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுப்பதற்கான மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. இதற்காக அண்மையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு "EPFO 3.0" என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் PF கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் மூலம் எளிதாக எடுக்க முடியும்.
EPFO 3.0 திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?: EPFO 3.0 திட்டம் 2025-ஆம் ஆண்டின் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு நீங்கள் EPF கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க முடியும். முன்னதாக பகுதி அளவு திரும்ப பெறுவதற்கே விண்ணப்பம் செய்ய வேண்டியிருந்தது.
அதோடு PF கணக்கை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு ஊழியர் ஏடிஎம்மில் இருந்து பிஎப் பணத்தை எடுக்க முடியும். பணத்தை ஊழியர்கள் எளிதாக எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும் வகையில் ஒரு கார்டை EPFO அமைப்பு வழங்கயிருக்கிறது. இந்தக் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதனால் விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது, அதிகாரிகள் வழங்கும் ஒப்புதலுக்காக காத்திருப்பது போன்ற அனைத்து செயல் முறையும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரவிருக்கும் EPFO 3.0 திட்டத்தின் மூலம் பல்வேறு நல்ல மாற்றங்கள் வர இருக்கின்றன. இதன் மூலம் பணம் எடுக்கும் செயல்முறையிலிருந்து பிற செயல்முறை வரை அனைத்தும் எளிதாகும் என்று கூறப்படுகிறது. ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது முதல் சேமிப்பை மொத்தமாக ஓய்வூதிய தொகையாக மாற்றுவது வரை பல்வேறு மாற்றங்கள் இதில் அடங்கும். அதேபோல PF தொகை பிடித்தம் செய்யப்படும் வரம்பும் அதிகரிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications