இந்திய ரீடைல் பார்மா துறையில் ஆன்லைன் வர்த்தகத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், முகேஷ் அம்பானி, டாடா குழுமம் போன்ற நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சிறிய நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை வலிமையாக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் படி ஆன்லைன் பார்மா நிறுவனமான பார்மாஈசி தனது வர்த்தகத்தை மருந்து விற்பனையில் மட்டும் அல்லாமல் மருத்துவப் பரிசோதனை துறையிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் பார்மாஈசி நிறுவனம் தற்போது மருத்துவப் பரிசோதனையில் பல வருடங்களாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. தைரோகேர் நிறுவனம் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய டைக்னோஸ்டிக் செயின் நிறுவனமாகும்.
தைரோகேர் நிறுவனத்தின் ஒரு பங்கை 1300 ரூபாய் விலையில் 66.1 சதவீதம் பங்குகளை சுமார் 4546 கோடி ரூபாய் தொகைக்குப் பார்மாஈசி கைப்பற்றுகிறது.
சமீபத்தில் பார்மாஈசி நிறுவனம் ஆன்லைன் பார்மா துறையில் சக போட்டி நிறுவனமான மெட்லைப் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இப்படி அம்பானி, டாடா போன்ற பெரும் முதலீட்டாளர்களைச் சமாளிக்கப் பார்மாஈசி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications