இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் உருவாகின்றன என்பது குறித்து தனது கருத்தை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான பியூஸ் கோயல் தெரிவித்திருக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு மற்றும் அதன் தாக்கம் என்ன? என்பது குறித்தும், ஸ்டார்ட் அப் துறையில் புதிய மாற்றங்கள் வரவில்லை என்றும் பல கருத்துக்களை பியூஸ் கோயல் முன்வைத்துள்ளார்.
ஸ்டார்ட்அப் மஹாகும்ப் என்ற நிகழ்ச்சியில் பேசிய பியூஸ் கோயல், ஸ்டார்ட் அப் துறையில் உள்ள சவால்கள் குறித்து பேசத் தொடங்கினார். நாட்டில் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உணவு விநியோக நெட்வொர்க் மற்றும் ஹைப்பர் பாஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் போன்ற வணிகங்களில் கவனம் செலுத்துகின்றன.

குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் உணவு டெலிவரி நெட்வொர்க் மற்றும் குவிக் டெலிவரி ஸ்டார்ட் அப்-கள் வசதியை வழங்கலாம். ஆனால் நாட்டின் நீண்ட கால முன்னேற்றத்திற்கு அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதோடு டீப்டெக் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றில் இன்னும் அவ்வளவான புதுமைகள் உருவாக்கப்படவில்லை. இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய தொழில்களாக இருந்தாலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.
இந்த துறைகளில் புதுமை இல்லாமல் இருப்பது நாட்டின் தொழில்நுட்பம் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கிறது. இளைஞர்களுக்கு உணவு டெலிவரி தளங்கள் வேலைவாய்ப்பை வழங்கினாலும்.. அவர்கள் மலிவான சம்பளத்தை தரும் தொழிலாளர்களாகவே கருதப்படுகின்றனர். இது அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு ஒருபோதும் வழி வகுக்காது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இது பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்காது.
பிற நாடுகளை விட இந்தியா எதில் பின்தங்கி இருக்கிறது என்பது குறித்து பேசிய போது.. சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செமி கண்டக்டர்கள், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகவும், ஆனால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களோ ஐஸ்கிரீம்கள் அல்லது மளிகை கடைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கோயல் சுட்டிக்காட்டினார். நமது பொருளாதாரத்திற்கு உண்மையிலேயே மதிப்பு வழங்கும் தொழில்களில் கவனம் செலுத்துவது அவசியம். போட்டி போடுவதற்கு வெட்கப்பட கூடாது. மாறாக புதுமை மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்ய பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை அதிகரிக்கும் திறன் கொண்ட டீப் டெக் துறை வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கிறது என்றும், தற்போது 1,000 ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இந்த துறையில் ஈடுபட்டுள்ளன என்றும், உலகளவில் போட்டி தன்மையுடன் இருக்க டீப் டெக் கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோயல் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications