ஸ்டார்ட் அப் துறைனாலே ஃபுட் டெலிவரி மட்டும்தானா? இதையும் கொஞ்சம் பண்ணுங்க! பியூஸ் கோயல் கருத்து!

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் உருவாகின்றன என்பது குறித்து தனது கருத்தை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான பியூஸ் கோயல் தெரிவித்திருக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு மற்றும் அதன் தாக்கம் என்ன? என்பது குறித்தும், ஸ்டார்ட் அப் துறையில் புதிய மாற்றங்கள் வரவில்லை என்றும் பல கருத்துக்களை பியூஸ் கோயல் முன்வைத்துள்ளார்.

ஸ்டார்ட்அப் மஹாகும்ப் என்ற நிகழ்ச்சியில் பேசிய பியூஸ் கோயல், ஸ்டார்ட் அப் துறையில் உள்ள சவால்கள் குறித்து பேசத் தொடங்கினார். நாட்டில் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உணவு விநியோக நெட்வொர்க் மற்றும் ஹைப்பர் பாஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் போன்ற வணிகங்களில் கவனம் செலுத்துகின்றன.

ஸ்டார்ட் அப் துறைனாலே ஃபுட் டெலிவரி மட்டும்தானா? இதையும் கொஞ்சம் பண்ணுங்க! பியூஸ் கோயல் கருத்து!

குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் உணவு டெலிவரி நெட்வொர்க் மற்றும் குவிக் டெலிவரி ஸ்டார்ட் அப்-கள் வசதியை வழங்கலாம். ஆனால் நாட்டின் நீண்ட கால முன்னேற்றத்திற்கு அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதோடு டீப்டெக் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றில் இன்னும் அவ்வளவான புதுமைகள் உருவாக்கப்படவில்லை. இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய தொழில்களாக இருந்தாலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

இந்த துறைகளில் புதுமை இல்லாமல் இருப்பது நாட்டின் தொழில்நுட்பம் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கிறது. இளைஞர்களுக்கு உணவு டெலிவரி தளங்கள் வேலைவாய்ப்பை வழங்கினாலும்.. அவர்கள் மலிவான சம்பளத்தை தரும் தொழிலாளர்களாகவே கருதப்படுகின்றனர். இது அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு ஒருபோதும் வழி வகுக்காது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இது பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்காது.

பிற நாடுகளை விட இந்தியா எதில் பின்தங்கி இருக்கிறது என்பது குறித்து பேசிய போது.. சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செமி கண்டக்டர்கள், ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகவும், ஆனால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களோ ஐஸ்கிரீம்கள் அல்லது மளிகை கடைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கோயல் சுட்டிக்காட்டினார். நமது பொருளாதாரத்திற்கு உண்மையிலேயே மதிப்பு வழங்கும் தொழில்களில் கவனம் செலுத்துவது அவசியம். போட்டி போடுவதற்கு வெட்கப்பட கூடாது. மாறாக புதுமை மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்ய பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை அதிகரிக்கும் திறன் கொண்ட டீப் டெக் துறை வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கிறது என்றும், தற்போது 1,000 ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இந்த துறையில் ஈடுபட்டுள்ளன என்றும், உலகளவில் போட்டி தன்மையுடன் இருக்க டீப் டெக் கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோயல் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+