ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்திய மாணவர்கள் செல்ல தேர்வு செய்யும் நாடுகளில் ஆஸ்திரேலியா பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டிற்கு வந்து படிப்பதற்கான விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா வர விரும்பும் மாணவர்கள் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் மாணவர் விசாவில் செல்லும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களது வங்கி கணக்கில் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதற்கான ஆதாரத்தை காட்டினால் மட்டுமே குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசானது மாணவர்களுக்கு விசாவினை வழங்கும். தற்போது ஆஸ்திரேலியா அரசு மாணவர்கள் சேமிப்பாக வைத்திருக்க வேண்டிய தொகையின் அளவினை அதிகரித்திருக்கிறது.
புதிய விதிமுறைகளின் படி ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஊதியத்தில் சுமார் 75 சதவிகித தொகையை மாணவர்கள் அவர்கள் வங்கி கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
அதாவது ஆஸ்திரேலியாவில் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் 75% என்ற போது இதன் மதிப்பு 29,710 டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 16.29 லட்சம் ரூபாய். எனவே இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் எனில் அவர்களது வங்கி கணக்கில் கிட்டத்தட்ட 16 .29 லட்சம் ரூபாய் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.
இதற்கான ஆதாரத்தை காட்டினால் மட்டுமே மாணவர்களுக்கு விசா கிடைக்கும். இந்த விதிமுறை மே 10ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது . ஆஸ்திரேலியாவில் படிப்பதற்காக விசாவிற்கு விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த போட்டி அதிகரித்ததன் காரணமாகவே ஆஸ்திரேலியா அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் முறையில் அடிக்கடி கட்டுப்பாடுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் ஆஸ்திரேலியா அரசு இந்த சேமிப்புத் தொகையை இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் இது வெறும் 11.54 லட்சம் ரூபாயாக தான் இருந்தது. தற்போது இது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் விசாவில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சிலர் படிக்கும் காலத்தை தாண்டி சட்டவிரோதமாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். எனவே தான் ஆஸ்திரேலிய அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்கள் பார்ட் டைம் ஆக வேலை செய்யலாம் என்றாலும் 15 நாட்களுக்கு 48 மணி நேரம் என்ற கணக்கிற்கு மிகாமல் வேலை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications