மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா போக திட்டமா..? புதிய விதிமுறை.. ஷாக்கில் மாணவர்கள்..!

ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்திய மாணவர்கள் செல்ல தேர்வு செய்யும் நாடுகளில் ஆஸ்திரேலியா பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டிற்கு வந்து படிப்பதற்கான விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா வர விரும்பும் மாணவர்கள் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் மாணவர் விசாவில் செல்லும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களது வங்கி கணக்கில் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.

 மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா போக திட்டமா..? புதிய விதிமுறை.. ஷாக்கில் மாணவர்கள்..!

இதற்கான ஆதாரத்தை காட்டினால் மட்டுமே குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசானது மாணவர்களுக்கு விசாவினை வழங்கும். தற்போது ஆஸ்திரேலியா அரசு மாணவர்கள் சேமிப்பாக வைத்திருக்க வேண்டிய தொகையின் அளவினை அதிகரித்திருக்கிறது.

புதிய விதிமுறைகளின் படி ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஊதியத்தில் சுமார் 75 சதவிகித தொகையை மாணவர்கள் அவர்கள் வங்கி கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

அதாவது ஆஸ்திரேலியாவில் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் 75% என்ற போது இதன் மதிப்பு 29,710 டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 16.29 லட்சம் ரூபாய். எனவே இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் எனில் அவர்களது வங்கி கணக்கில் கிட்டத்தட்ட 16 .29 லட்சம் ரூபாய் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதற்கான ஆதாரத்தை காட்டினால் மட்டுமே மாணவர்களுக்கு விசா கிடைக்கும். இந்த விதிமுறை மே 10ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது . ஆஸ்திரேலியாவில் படிப்பதற்காக விசாவிற்கு விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த போட்டி அதிகரித்ததன் காரணமாகவே ஆஸ்திரேலியா அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் முறையில் அடிக்கடி கட்டுப்பாடுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது.

கடந்த ஏழு மாதங்களில் மட்டும் ஆஸ்திரேலியா அரசு இந்த சேமிப்புத் தொகையை இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் இது வெறும் 11.54 லட்சம் ரூபாயாக தான் இருந்தது. தற்போது இது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் விசாவில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சிலர் படிக்கும் காலத்தை தாண்டி சட்டவிரோதமாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். எனவே தான் ஆஸ்திரேலிய அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்கள் பார்ட் டைம் ஆக வேலை செய்யலாம் என்றாலும் 15 நாட்களுக்கு 48 மணி நேரம் என்ற கணக்கிற்கு மிகாமல் வேலை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+