பெங்களூர்: கர்நாடக அரசு புதிதாக தொழில் தொடங்குவதற்காக தங்களுடைய வேலையை விட்டுவிட்டு வருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே "புதிய தொழில் தொடங்குவது என்பது ஒருவர் எடுக்கக்கூடிய ஆபத்துகள் நிறைந்த ஒரு முயற்சி. ஒருவர் நிலையான தனது வேலையை விட்டுவிட்டு புதிய முயற்சியில் ஈடுபடும்போது அவருக்கு அது நிதி ரீதியாக மிகவும் ஆபத்தாக இருக்கும். பல திறமையான நபர்கள் நிதியில்லாத காரணத்தினால் தான் தொழில் தொடங்க தயங்குகின்றனர். எனவே தான் தங்கள் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை நாங்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இந்த உதவி தொகை அவர்களின் நிதி சுமையை ஓரளவு குறைக்க உதவும் என அவர் கூறியுள்ளார். அதன்படி ஒரு வருடத்திற்கு மாதம் தோறும் 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் புதிதாக தொழில்முனைவோர்கள் தங்களது அன்றாட செலவுகளை பற்றி கவலைப்படாமல் தங்கள் வணிகங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடியும் என்றும் உரிய தகுதியின் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாத உதவி தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
தங்களின் அரசு ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என சுட்டிக்காட்டிய அவர் கர்நாடக அரசோடு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் பதிவு செய்கிறது என்றால் அவர்களின் முதல் வாடிக்கையாளர் கர்நாடக அரசாகத்தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, கர்நாடக முதலமைச்சர் ராஜீவ்காந்தி தொழில் முனைவோர் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி அறிவியல் அல்லது பொறியியல் பின்னணி கொண்ட இளம் தொழில் முனைவோருக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.
இதனிடையே வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் இதன் மூலம் பெங்களூரில் ஸ்டார்ட் அப்களை தொடங்குவதற்கு பதிவு செய்திருப்பதாக கார்கே கூறியுள்ளார். குறிப்பாக துறை சார்ந்த காரிடார்கள் பெங்களூரில் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். முதலில் ஏஐ காரிடார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications