பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி (CCEA) இன்று நடத்திய முக்கியமான கூட்டத்தில், PM-eBus Sewa என்னும் முக்கியமான திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 10,000 இ-பஸ்கள் அதாவது எலக்ட்ரிக் பஸ்கள் நாட்டின் போக்குவரத்தில் சேர்க்கப்படும், இதோடு அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதன் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

மத்திய அரசு இந்த PM-eBus Sewa திட்டத்தின் கீழ் நாட்டின் 169 நகரங்களில் 10,000 இ-பஸ்கள் அதாவது எலக்ட்ரிக் பஸ்கள் பயன்படுத்தப்படும். இதை தொடர்ந்து பசுமை நகர்ப்புற இயக்கம் முயற்சிகளின் (Green Urban Mobility Initiatives) கீழ் எலக்ட்ரிக் பஸ்களின் இயக்கத்தை ஏதுவாக்க 181 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்களுக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
இப்புதிய திட்டத்தை தனியார் - பொது கூட்டாண்மை அதாவது PPP மாடலில் இயக்கப்படும், இந்த PPP மாடலில் இந்திய பெரு நகரப் பேருந்துகளின் இயக்கத்தில் 10,000 இ-பஸ்கள் இணைக்கப்பட்டு எலக்ட்ரிக் பஸ் பயன்பாட்டை அதிகரிக்க உள்ளது. இதுதான் PM-eBus Sewa திட்டத்தின் அடிப்படை.
மத்திய அரசு PM-eBus Sewa திட்டம் சுமார் 57,613 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ளது. இதில் மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்கான நிதி உதவிகளை வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் மற்றும் நிதியுதவிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

மாநகரப் பேருந்து இயக்கங்களில் சுமார் 10,000 எலக்ட்ரிக் பேருந்துகளை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தத் திட்டம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகளை 181 நகரங்களில் உருவாக்கப்பட உள்ளது. இதைவிட முக்கியமாக நகர போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் பயன்பாடு சேமிக்கப்படும்.
PM-eBus Sewa திட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன - ஒன்று நகரப் பேருந்து சேவைகளை அதிகரிக்கவும் மற்றொன்று Green Urban Mobility Initiatives கீழ் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். இத்திட்டத்தின் கீழ் இமைக்கப்படும் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கும், பேருந்து நடத்துனர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் மாநிலங்கள் அல்லது நகரங்களின் நிர்வாகத்தின் பொறுப்பு.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications