விரைவில் வரப்போகும் குட் நியூஸ்.. PM கிசான் திட்டத்தின் 19-வது தவணை எப்போது?

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) என்ற திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி ஒரே தவணையில் வழங்கப்படுவதில்லை. மாறாக 3 சம தவணைகளாக ரூ. 2000 வீதம் வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. PM கிசான் திட்டம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 18-வது தவணை அக்டோபர் 5, 2024-அன்று வெளியானது. அதன் பிறகு 19-வது தவணை எப்போது வரும்? என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 விரைவில் வரப்போகும் குட் நியூஸ்.. PM கிசான் திட்டத்தின் 19-வது தவணை எப்போது?


PM கிசான் 19வது தவணை எதிர்பார்க்கப்படும் தேதி: 19-வது தவணை பிப்ரவரி 2025-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் இன்னும் இது தொடர்பான தேதியை உறுதிப்படுத்தவில்லை. PM கிசான் திட்டத்தின் நிதி உதவி பொதுவாக 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். இது ஒரு நிலையான அட்டவணையை பின்பற்றி வழங்கப்பட்டு வருகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது பிப்ரவரி முதல் வாரத்தில் 19-வது தவணை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

PM கிசான் திட்டத்திற்கான தகுதியை எவ்வாறு சரிபார்க்கலாம்?: விவசாயிகள் ஏற்கனவே PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்திருப்பீர்கள். அப்படியானால் உங்களுக்கு நிதியுதவி கிடைக்குமா? என்பதை கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதளத்திற்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: "Beneficiary list" என்ற பக்கத்திற்கு செல்லவும்.

ஸ்டெப் 3: உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தின் விவரங்களை என்டர் செய்யவும்.

ஸ்டெப் 4: உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க "Get Report" என்பதைக் கிளிக் செய்யவும். இது தவிர, உள்ளூர் ஊராட்சிகளிலும் பயனாளிகள் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.

PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?: விவசாயிகள் PM கிசான் திட்டத்திற்கு ஆன்லைனில் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?:

ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதளத்தைப் பார்வையிடவும்.

ஸ்டெப் 2: அதன் பிறகு "New Farmer Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: ஆதார் நும்பர், மாநிலம், மாவட்டம் மற்றும் வங்கி தகவல் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.

ஸ்டெப் 4: படிவத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு நகலை சேமிக்கவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+