பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) திட்டத்தின் 19-வது தவணை பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24 அன்று பீகாரின் பாகல்பூருக்கு செல்ல உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது இவர் 18-வது தவணையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PM கிசான் திட் டம் ஏழை எளிய விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் 9.4 கோடி விவசாயிகள் இதுவரையில் 20,000 கோடி பெற்றுள்ளனர்.

PM கிசான் திட்டம் என்றால் என்ன?: பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டம் என்பது விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக அரசு வழங்கும் நிதியுதவி திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு தகுதி பெறும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையில் ஒரு முறையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையில் ஒரு முறையும், டிசம்பர் முதல் மார்ச் வரையில் ஒரு முறையும் என 3 முறை பயணிகளின் வங்கி கணக்கிற்கு 2000 ரூபாய் மாற்றப்படுகிறது.
இந்தத் திட்டம் முதன்முதலாக 2019-ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் மூலமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
PM கிசான் திட்டத்திற்கான தகுதி: பிஎம் கிசான் திட்டத்தின் 19-வது தவணை பெற ஒருவர் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். PM கிசான் திட்டத்தில் பலன் பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், சாகுபடி செய்வதற்கு சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும். சிறு அல்லது குரு விவசாயியாக இருக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவராக இருக்கக் கூடாது. வருமான வரி தாக்கல் செய்பவராக இருக்கக் கூடாது. நிறுவன நிலங்களின் உரிமையாளராக இருக்கக் கூடாது.
PM கிசான் திட்டத்தின் e-KYC: இத்திட்டத்தின் மூலம் பணம் பெற விவசாயிகள் e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு e-KYC செயல்முறை கட்டாயமாகும். PM கிசான் இணையதளம் வழியாக OTP அடிப்படையிலான eKYC-ஐ முடிக்கலாம் அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC-க்கு அருகிலுள்ள பொது சேவை மையத்தை (CSC) அணுகலாம்.
OTP அடிப்படையிலான e-KYC-க்கான ஸ்டெப்ஸ்:
ஸ்டெப் 1:அதிகாரப்பூர்வ PM கிசான் யோஜனா இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "Farmers Corner" பகுதிக்குச் சென்று e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்யவும். OTP சரிபார்ப்பிற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். e-KYC செயல்முறையை முடிக்க பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும்.
பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC செயல்முறை:
ஸ்டெப் 1: உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது மாநில சேவா கேந்திராவிற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: e-KYC செயல்முறையைத் தொடங்க CSC ஆபரேட்டரை அணுகவும்.
ஸ்டெப் 3: சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உங்கள் ஆதார் கார்டு மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரை வழங்கவும். CSC ஆபரேட்டர் உங்கள் கைரேகை அல்லது கருவிழியை ஸ்கேன் செய்வதன் மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பெறுவார். அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் e-KYC செயல்முறை முடிக்கப்படும்.
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் பயனாளியாக நீங்கள் இருக்கிறீர்களா? என்பதை ஆன்லைனில் சரிபார்க்க, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ பிரதம மந்திரி கிசான் யோஜனா இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Beneficiary Status" பக்கத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 3: அதன் பின் "Beneficiary Status" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: "Get Data" என்பதை கிளிக் செய்யவும்.
More From GoodReturns

இலவச சோலார் பேனல் மின்சார திட்டம்! ஏழை எளிய குடும்பங்களுக்கு அதிரடி திட்டம் - முழு விவரம்!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications