பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) திட்டம் என்பது நம் நாட்டில் இருக்கும் நலிவுற்ற விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தகுதி பெறும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதற்காக ஆண்டுக்கு 6,000 ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. PM கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 18-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளுக்கு நாள் PM கிசான் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்னவென்றால் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று. இதற்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் PM கிசான் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்?: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதிச் சுமைகளைக் குறைக்க மத்திய அரசின் ஒரு முக்கிய முயற்சியாக உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே PM கிசான் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். விவசாயக் குடும்பங்களாக இருந்தால் தலைமைப் பொறுப்பில் இருக்கும் விவசாயிக்கு மட்டுமே இந்த திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.
அதாவது விவசாய நில ஆவணங்களில் யாருடைய பெயர் உள்ளதோ? அந்த நபருக்கு மட்டுமே இந்த திட்டத்தின் பலன்கள் சென்றடையும். எனவே விவசாய குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
சமமான விநியோகத்தை உறுதி செய்தல்: ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு பயனாளி என்ற விதியை செயல்படுத்துவதன் மூலம் PM கிசான் திட்டத்தின் நன்மைகள் ஒரே குடும்பத்தின் மூலம் பெறப்படுவதைத் தவிர்க்கவும், நிதியுதவி தகுதியான அனைத்து பெறுநர்களையும் சென்றடைவதை உறுதி செய்யவும், இத்தகைய விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பயனாளி என்ற PM கிசான் திட்டத்தின் விதி வெளியில் இருந்து பார்ப்பதற்கு கட்டுப்பாடாக தோன்றினாலும் சமமான வினியோகம் மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவுவதற்கான இந்த திட்டம் பலதரப்பட்ட விவசாயிகளையும் சென்றடைவதை உறுதி செய்கிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications