டெல்லி: இரண்டு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல்நஹ்யான், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அபுதாபி-யின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல்நஹ்யான் ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேரில் சென்று வரவேற்றார். இதனை அடுத்து இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஆகியோர் ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் நெருங்கிய நண்பருக்கு வரவேற்பு என பதிவிடப்பட்டுள்ளது. இளவரசரோடு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அமைச்சர்களும் பல்வேறு தொழில் துறை சார்ந்த பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர்.
செவ்வாய்கிழமை மும்பைக்கு பயணம் செய்ய இருக்கும் அல்நஹ்யான் அங்கே தொழில் கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இரு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த தொழிலதிபர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பயணம் செய்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அடுத்த கட்டத்திற்கு சென்றது. குறிப்பாக எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திராம் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது தொடர்பாக இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திலும், உள்ளூர் நாணயத் தீர்வு அமைப்பிலும் கையெழுத்திட்டுள்ளன. அதுமட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பிரதமர் மோடியின் பயணத்தை தொடர்ந்து மேலும் அதிகரித்தது.
2022-23 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதுமட்டுமின்றி இந்தியாவில் நேரடியாக அந்நிய முதலீடு செய்யக்கூடிய நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தில் இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 3.5 மில்லியன் இந்தியர்கள் வேலை, படிப்பு, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கி இருக்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் ஆதரவோடு தான் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்தது.
அதே வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட ஒத்துழைப்பும் அண்மை ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இரு நாடுகளும் இணைந்து "Dessert Cyclone" என்ற பெயரில் கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications