நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட் எப்போதும் போல பிஜேபியின் பட்ஜெட் ஆக இருக்காது, மோடி 3.0 ஆட்சி ஆந்திராவின் சந்திரபாபு நாயடு, பீகார் நிதிஷ்குமார் ஆகியோரின் மாநிலங்களுக்கு ஆதரவாக பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகலாம் என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வின் ஆதரவில் தான் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி 3வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அனைவருக்கும் தெரியும், இந்த கூட்டணி காரணமாக சந்திரபாபு நாயுடு முக்கிய அமைச்சர் பதவிகளையும், சபாநாயகர் பதவியைக் கேட்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவ்விரண்டையும் விரும்பாத சந்திரபாபு நாயுடு தனது ஆந்திர மாநில வளர்ச்சி மீது குறிவைத்துள்ளார். இதற்காக சமீபத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்த ஐந்து நாட்களுக்குள், சுமார் ரூ.60,000 கோடி முதலீட்டில் ஆந்திர மாநிலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் மையத்தை அமைக்க வேண்டும் என்ற சந்திரபாபு நாயுடு-வின் முக்கிய கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் முக்கிய கூட்டாளியாக இருக்கும் சந்திரபாபு நாயுடு-வின் TDP கட்சியின் கோரிக்கை மறுக்க முடியாத நிலையில், கோரிக்கை வைக்கப்பட்ட உடன் மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) உயர் அதிகாரிகளைப் புதன்கிழமை சந்தித்து ஆந்திர மாநிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மூன்று இடங்கள் ஸ்ரீகாகுளம், மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமயப்பட்டினம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தற்போது இந்த 3 இடங்கள் மதிப்பீடு செய்து, ஒரு இடத்தை இறுதி தேர்வாக அறிவிக்கும், அதை தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் துவங்கும். இந்த செயல்முறைக்குக் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் என்பதால் பட்ஜெட்டில் இடம்பெற்றாலும் போகலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
ஸ்ரீகாகுளம், மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமயப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களும் மாநிலத்தின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு என வெவ்வேறு பகுதிகளில் உள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் பூரியுடன் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்திய சந்திப்பின் விளைவாக ஆந்திராவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் மிகப்பெரிய வெற்றியாகும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications