நம் நாட்டின் 80ஆவது சுதந்திர தின விழா ஒட்டுமொத்த இந்தியர்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்ல நாளில் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
இந்தியா தனது 80ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் நம் நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.

இனி போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பிரதமர் தனது உரையில், இன்றைய கல்விச் சூழலில் தனியார் பயிற்சி மையங்கள் நடுத்தர வர்க்க மற்றும் ஏழை குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார சுமையாக மாறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.
பயிற்சி மையங்களுக்கான அதிகப்படியான கட்டணம், வெளியூர்களுக்கு சென்று தங்குவதற்கான செலவுகள் ஆகியவை நடுத்தர வர்க்க குடும்பங்களின் சேமிப்பை பெருமளவில் பாதிக்கின்றன. இதை தவிர்க்கவே இந்த இலவச ஆன்லைன் பயிற்சி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வலுவான டிஜிட்டல் பொது கட்டமைப்பை பயன்படுத்தி, சிறந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து ஒரு விரிவான பயிற்சி நெட்வொர்க்கை அரசு உருவாக்கவுள்ளது. சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டல் மற்றும் தரமான கல்வி வளங்கள் இனி அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக வசதி வாய்ப்புகள் குறைவானவர்களுக்கும் சென்றடைவதை இந்த திட்டம் உறுதி செய்யும்.
இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மையங்களுக்காக செலவிடும் பல ஆயிரம் கோடி ரூபாயை குடும்பங்கள் சேமிக்க முடியும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பயிற்சியை பெறுவதால், அவர்கள் குடும்பத்தை பிரிந்து வெளியூர்களில் தங்கும் அவசியமும் குறையும்.
இந்தியாவில் அரசு வேலை, வங்கி வேலைகளில் சேர வேண்டும் என்றாலே போட்டி தேர்வு தான் எழுத வேண்டும். இதற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று தான் படிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே மிடில் கிளாஸ் குடும்பங்கள் பள்ளி, கல்லூரி படிப்பை தாண்டி கோச்சிங் கிளாஸ்களுக்கும் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. மோடியின் இந்த அறிவிப்பின் மூலம் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு பல ஆயிரம் மிச்சமாகும்.
இலவச ஆன்லைன் பயிற்சியுடன் சேர்த்து, தொழில்நுட்ப உலகில் இந்திய இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில், வரும் ஆண்டில் சுமார் 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன்களை பயிற்றுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications

