இன்று இரவு சுமார் 8 மணிக்கு பிரதமர் கொரோனா வைரஸ் பற்றிப் பேசி இருக்கிறார். இனி அவர் மொழியில்...
உலகமே ஒரு நெருக்கடியில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. எப்போதும் எந்த சூழலும் சில தேசங்களுக்கு மட்டுமே தான் இருக்கும். ஆனால் இந்த கொரோன பிரச்சனை உலகம் முழுக்க பரவிக் கொண்டு இருக்கிறது எனப் பேசத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
எனக்கு உங்களுடைய நேரம் வேண்டும். இந்த கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காது என கருதக் கூடாது. ஒரு இந்தியப் பிரஜையாக, மாநில மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவேன் என சத்தியம் செய்ய வேண்டும்.
நாம் நலமாக இருந்தால், நாடும் நலமாக இருக்கும். உலகம் நலமாக இருந்தால் நாமும் நலமாக இருப்போம். வரும் வாரங்களில் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டில் இருந்த படியே வேலை பார்த்துக் கொள்ளுங்கள் என மக்களுக்கு பல நல்ல அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறார். அப்படியே பொருளாதாரத்தைப் பற்றியும் பேசி இருக்கிறார்.
புதிய டாஸ்க் ஃபோர்ஸ்
வரும் மார்ச் 22, ஞாயிற்றுக் கிழமை மக்கள், காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என Janta Curfew பற்ரி எல்லாம் பேசி விட்டு, பொருளாதாரத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். COVID-19 Economic Task Force என ஒன்றை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அமைத்து இருக்கிறார்களாம்.
இந்தியப் பொருளாதாரம்
ஏற்கனவே இந்தியப் பொருளாதாரம் கடந்த நான்கு காலாண்டுகளாக ஜிடிபி வளர்ச்சி சரிந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சூழலில் மிகச் சரியாக, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த, நிதி அமைச்சர் தலைமையில், மேலே சொன்ன டாஸ்க் ஃபோர்ஸை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இது பாராட்டுக்குறியது. அதோடு மிக முக்கியமாக 2 கோரிக்கைகளை வைத்து இருக்கிறார் பிரதமர்.
பயத்தில் பர்சேஸ்
வரும் நாட்களில், அத்தியவசியப் பொருட்கள் எல்லாம், சாதாரண நாட்களைப் போலக் கிடைக்குமா என்கிற பதட்டத்தில், நிறைய பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள் எனச் சொல்லி இருக்கிறார் பிதமர் மோடி. தோடு சீராக பொருட்கள் கிடைக்க, எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
கூலி
அதோடு நம் வீட்டில் வேலை பார்க்கும் வீட்டு உதவியாளர்கள், ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் போன்ற கூலித் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்காதீர்கள் எனவும் பலே கோரிக்கை வைத்து இருக்கிறார். மிக குறிப்பாக வதந்திகளை நம்பாதீர்கள் எனச் சொல்லி இருக்கிறார். இந்த் ஐரண்டு கோரிக்கைகளுமே உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டியது தான்.
அரசு கடனை
அதே போல இந்திய அரசும் தன்னால் முடிந்த வரை எல்லா மக்களுக்கும் சீராக பொருட்கள் கிடைப்பதையும், அவர்களுக்கான வருமானம் மற்றும் சம்பளம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதை மத்திய அரசு செய்யும் என நம்புவோம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications