கடந்த 10 ஆண்டுகளில் மின்னணு சாதனங்கள் மற்றும் செல்போன் உற்பத்தியில் இந்தியா மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். செல்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான சாதனங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி, மொபைல் போன் தயாரிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 99% சாதனங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு மின்னணுவியல் துறை கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2014-15 முதல் 2023-24 வரை மின்னணு உற்பத்தி மதிப்பு ரூ.1.9 லட்சம் கோடியில் இருந்து ரூ.9.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களையும், மொபைல் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்ததையும் இந்த மாற்றம் எடுத்துக்காட்டுகிறது. எலக்ட்ரானிக்ஸ் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கடந்த டிசம்பர் 19ம் தேதி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத், நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். இதேபோல், உலக அளவிலான செல்போன் தயாரிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக கடந்த 4ம் தேதி மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இன்று, அட்வான்டேஜ் அசாம் 2.0 மற்றும் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025 ஐத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அதில், அசாமில் டாடா குழுமத்தின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுவுள்ள செமிகண்டக்டர் அசெம்பிளி அண்ட் டெஸ்ட் ஆலை, முழு வடகிழக்கு பிராந்தியத்திற்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று பாராட்டு தெரிவித்தார். இந்த ஆலை Morigaon மாவட்டத்தில் ரூ. 27,000 கோடியின் முதலீட்டில் கட்டப்படவுள்ளது. இங்கு நாள்தோறும் 48 மில்லியன் செமிகண்டக்டர் சிப்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இது உலகளாவிய செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் நிலையை கணிசமாக உயர்த்தும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றத்தை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அரசியல் ஸ்திரதன்மை மற்றும் நல்லாட்சியால் இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த வளர்ச்சிக்கு கொள்கை அடிப்படையிலான மறுசீரமைப்புகள், தொடக்க நிறுவனங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு, மற்றும் உற்பத்தி-இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி ஊக்கத்தொகைளே காரணம் என்று பிரதமர் கூறினார்.
செமிகண்டக்டர் உற்பத்தியில், முக்கிய பங்கு வகிக்கும் அசாமின் வளர்ச்சியை எடுத்துரைத்த பிரதமர் மோடி, Jagiroad-ல் டாடா செமிகண்டக்டரின் சமீபத்திய அசெம்பிளி மற்றும் தொழில்நுட்ப வசதி தொடங்கியதை அவர் பாராட்டி, இது புதுமையை ஊக்குவிப்பதோடு, அசாமை வடகிழக்குக்கான தொழில்நுட்ப மையமாக நிலைநிறுத்தும் என்று கூறினார். நாட்டின் சுற்றுச்சூழல் பொறுப்புகளுடன் இணக்கமான முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் புதுப்பிக்கத் தக்க பசுமை எரிசக்தி இயக்க முன்னெடுப்பு தற்போது உலகளாவிய அளவுகோலாக பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications