இந்தியாவில் ஏராளமான சிறுதொழில்கள் உள்ளன. எனினும் அவற்றில் பலவும் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க பணம் கிடைத்தாலும் கூட, என்ன செய்வது என்பதே பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கும்.
ஏனெனில் ஒரு தொழிலை இப்படியெல்லாம் கூட மாற்றி யோசிக்க முடியுமா? என்பது பற்றி சிந்திக்க வைத்து தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.
பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும், இந்தியாவின் ஜிடிபி விகிதத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் தான். ஆக ஸ்டார் அப்களை ஊக்குவிக்க இதுவும் ஒரு வகையில் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ட் அப்களில் அதிக வாய்ப்புகள்
ஸ்டார்ட் அப்கள் என்றாலே தற்போது பரவலாய் பேசப்படும் நிறுவனங்கள் ஓலா, ஸ்விக்கி, உபெர், பர்ஸ்ட், சோமேட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் அடங்கியுள்ளன. மேற்கண்ட இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்கொண்டு பல நிறுவனங்களும் பணியமர்த்தியும் வருகின்றன. இந்த நிறுவனங்களின் கான்செப்ட் பழையதாக இருந்தாலும், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை நாடு முழுவதும் உருவாக்கி வருகின்றன.
வேலை வாய்ப்பு உருவாக்கம்
இதனால் ஸ்டாப்ட் அப் இந்திய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன எனலாம். கடந்த 2021ல் ஸ்டார்ட் அப்கள் 1.7 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய நிலையில், இது வரையில் 5.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிப்பு
அங்கீகரிப்பட்ட 48,093 ஸ்டார்டப் நிறுவனங்கள் இதுவரையில் மொத்தம் 5,49,842 வேலைகளை உருவாக்கியுள்ளன. இது கடந்த நிதியாண்டில் வெறும் 1.7 லட்சம் வேலைகளையே உருவாக்கியுள்ளன. கடந்த ஜூன் 3, 2021 வரையில், 50,000 ஸ்டார்ட் அப்களை அங்கீகரித்துள்ளதாக DPIIT அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் ஏப்ரல் 1, 2020 முதல் 19,896 ஸ்டார்டப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எந்தெந்த துறைகள்
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்களில் உணவு பதப்படுத்துதல், பொருட்கள் மேம்பாடு, அப்பிளிகேஷன் டெலவப்மெண்ட், ஐடி கன்சல்டிங், பிசினஸ் சப்போர்டிவ் சேவைகள் என பல துறையை கொண்டுள்ளது. இதில் கடைசி 180 நாட்களில் 10,000 ஸ்டார்ட் அப்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.