பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசியதாக அறிவித்துள்ளார். இந்த போன் காலில் புடின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அலாஸ்காவில் நடைபெற்ற சமீபத்திய சந்திப்பு குறித்த தனது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவு வாயிலாக தெரிவித்துள்ளார்.
புடின் - டிரம்ப் மத்தியிலான சந்திப்பு உலகளவில் கவனிக்கப்பட்ட நிலையில், ரஷ்யா -உக்ரைன் மத்தியிலான போர் மற்றும் தாக்குதலுக்கு விரைவில் நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியானது. இதோடு அமெரிக்கா - ரஷ்யா மத்தியிலான உறவு மேம்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை திங்கட்கிழமை சந்திக்க உள்ளார். இதற்கிடையில் தான் மோடியுடன் பேசியுள்ளார் விளாடிமிர் புடின். டிரம்ப்-புடின் சந்திப்பில் உக்ரைன் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், ஜெலென்ஸ்கி சந்திப்பில் சாதகமான முடிவு வரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மோடி, புடின் உடனான தொலைப்பேசி அழைப்பில் உக்ரைன் பிரச்சனைக்கு இந்தியா தொடர்ந்து சர்வதேச அரங்கில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை ஆதரிப்பதாக வலியுறுத்தியுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளையும் ஆராய்ந்ததாக மோடி குறிப்பிட்டுள்ளார். இது இந்தியா-ரஷ்ய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது.

இதேவேளையில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக டிரம்ப் இந்தியா மீது மட்டும் குறிவைத்து 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது. இது டிரம்ப்- புடின் சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் பேசுகையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யலாம் என பேசினார்.
இந்த மறுபரிசீலனையில் இந்தியா மீதான வரியை அபராத வரியாக விதித்த 25 சதவீத வரியை மொத்தமாக நீக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications