பிரதமர் மோடி அதிரடி.. $5 டிரில்லியன் இலக்கு என்பது ஒரு படி தான்.. எங்கள் இலக்கு அதை விட பெரியது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் தசாப்தம் இந்திய தொழில் முனைவோருக்கானதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிர்லோஸ்கர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, வரவிருக்கும் தசாப்தங்கள் இந்திய தொழில் முனைவோருக்கு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடையவும், கனவை நனவாக்கவும் இது ஒரு படியாக இருக்கும் என்றும் தொழில் அதிபர்களை ஊக்கப்படுத்தியும் பேசியும் உள்ளார்.

இலக்கு மிகப் பெரியது

இலக்கு மிகப் பெரியது

மேலும் அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாங்கள் புதிய தசாப்தத்திற்குள் நுழையும் போது, அந்த தசாப்தம் இந்திய தொழில் முனைவோருக்கானதாக இருக்கும் என்று நான் கூற விரும்புகிறேன். மேலும் மத்திய அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கு என்பது ஒரு படி தான். ஆனால் எங்கள் கனவும் இலக்கும் அதை விட பெரியது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை

இந்திய தொழில் முனைவோருக்கு ரிஸ்க் எடுக்கும் திறமை உள்ளது. மேலும் அவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக விருப்பம் உள்ளது. மேலும் அவர்கள் புதிய துறைகளில் சாதனை படைக்க விரும்புகின்றனர். ஆக தொழில் துறையினர் அதை மேம்படுத்த வேண்டும். மேலும் தற்போது அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தொழில் துறையினர் அதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

தொழில் துறையினருக்கு துணை

தொழில் துறையினருக்கு துணை

அரசு தொழில் துறையினருக்கு உறுதுணையாக அருகில் நிற்கும் போது, உண்மையான தொழில்முனைவோர் முன்னுக்கு வருவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் உள்நோக்கத்துடன் சீர்திருத்த முயற்சியுடன் செயல்பட்டது. ஒருமை பாட்டுடனும் செயல்பட்டது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இது தொழில்துறையினரை மேலும் மேம்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

கார்ப்பரேட்களுக்கு இதுவரை இல்லாத வரி குறைப்பு

கார்ப்பரேட்களுக்கு இதுவரை இல்லாத வரி குறைப்பு

இது தவிர இந்திய தொழில் துறையினரை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டியும் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர பொதுத்துறை வங்கிகளின் சீர்திருத்தங்கள் நீண்டகாலமாக செய்யபட்டு வருகின்றது. மேலும் இந்திய தொழில் துறையில் உள்ள பல தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆக இதுபோன்ற அரசின் நடவடிக்கையானது வரவிருக்கும் தசாப்தங்களில் நிச்சயம் கைகொடுக்கும் என்றும் நாமும் நம்புவோம்..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi said Target of $5 trillion economy is just a phase, our targets are bigger

PM Modi said Target of $5 trillion economy is just a phase; our targets are bigger, and higher. Also he said Indian entrepreneurs have the capacity to take risks and willing to expand their businesses into new sectors, and achieve something big.
Story first published: Tuesday, January 7, 2020, 11:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X